உப பாண்டவர்கள் (மகன்கள்), பிரகதி (மகள்), சுதனு (மகள்)
திரௌபதியம்மன் (Draupati Amman) சமசுகிருத மகாபாரதத்தில் பல கடவுள்களின் அவதாரம் என விவரிக்கப்படுகிறார்.[1] ஆதி பார்வதத்தில் சாம்பவா பிரிவில் இந்திராணியின் பகுதி அவதாரம் எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இருந்தபோதிலும், வைவாகிகாவில் வியாசர், லட்சுமியாகக் குறிப்பிடுகிறார்.[3] இசுவர்கரோகணிக பார்வதத்தில், யுதிஸ்டர் சொர்க்கத்தில் திரௌபதி இலட்சுமியாக இருந்தபோது பார்த்ததாக நம்பப்படுகிறது.[4]
இவரை நாட்டுப்புறத் தெய்வமாகக் கருதப்படுகிறார்.விழாக்காலங்களில் தீ மிதித்தல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.[5] பெங்களூர் கரகா திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவில் திரௌபதி அம்மன் ஆதிசக்தி மற்றும் பார்வதி ஆகியோரின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.[6]
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கருநாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 400 கோயில்கள் உள்ளன.[7]வன்னியர் சாதி மக்களால் பெரும்பான்மையாக வணங்கப்படுகிறார்.[8][9][10] திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைப் பாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. மற்றும் ஈழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே திரௌபதியம்மனுக்கு பெரும்பாலான ஆலயங்கள் காணப்படுகின்றன. இவற்றில் வருடாந்த திருச்சடங்கு இடம்பெறும் (ஆகமம் சாராத)ஆலயங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பாண்டவர்கள் கொலுவிருந்து விரதம் ஏற்று பாண்டவர்கள் வனவாசம் புகுதலும் அருச்சுணர் தவநிலை ஏறுதலும் தீமிதித்தல் இடம்பெற்று தீப்பள்ளய சடங்குடன் இனிதே நிறைவு பெறும்.
தந்தையுடன் அக்னிக் குண்டத்தில் இறங்கும் மகள், இலங்கை உடப்பு திரௌபதியம்மன் கோயிலில்