தி. சு. சதாசிவம்
வாழ்க்கைக் குறிப்புசதாசிவம் தமிழ்நாடு, திருப்பத்தூரில் பிறந்தார். இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை பெங்களூரில் கழித்தார். அவருக்கு மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மொழிபெயர்ப்புத் துறையில்கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி எனப் பல மொழிகளில் இருந்து 25க்கு மேற்பட்ட அவரது மொழிபெயர்ப்புகள் தமிழில் நூல்களாக வெளிவந்திருக்கின்றன. யூ. ஆர். அனந்தமூர்த்தி, சிவராம காரந்த், மொகல்லி கணேஷ், சந்திரசேகர கம்பார், லங்கேஷ் போன்ற முக்கியமான கன்னட எழுத்தாளர்கள், பெர்டோல்ட் பிரெக்ட், அகிரா குரசோவா போன்ற பன்னாட்டு ஆளுமைகளின் படைப்புகளைச் சதாசிவம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். திரைப்படத் துறையில்கடந்த 15 ஆண்டுகளாக அவர் நடிப்பிற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். பல திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். மர்மதேசம், விடாது கருப்பு, அண்ணாமலை, கோலங்கள் உள்ளிட்ட பிரபல தொடர்களில் அவர் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். சமூக சேவைசதாசிவம் இடதுசாரி கலை-இலக்கிய வட்டங்களிலும் தமிழ்த்தேசிய, தலித் இயக்கங்களிலும் முனைப்புடன் பங்கேற்றார். எழுதிய சில நூல்கள்
விருதுகள்
|
Portal di Ensiklopedia Dunia