தீபா கர்மாகர்
தீபா கர்மாகார் (Bengali: দিপা কর্মকার; பிறப்பு 9 ஆகத்து 1993, அகர்தலா) என்பவர் ஒரு இந்திய கலைநய சீருடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்) விராங்கனையாவார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சார்பாக 2016 கோடை ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே சீருடற்பயிற்சி மெய்வல்லுநர் ஆவார். ஒலிம்பிக் போட்டியொன்றில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் பெண் சீருடற்பயிற்சியாளரும் இவரேயாவார்.[1][2] இரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் போட்டியில் குதிரை தாவுதல் போட்டியில் 15.066 புள்ளிகள் எடுத்து நான்காவதாக வந்தார்; மூன்றாவதாக வந்த சுவிட்சர்லாந்தின் கியுலியா இசுடெய்ன்கிருபர் பெற்ற 15.216ஐ விட 0.015 புள்ளிகளில் மயிரிழையில் வெங்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.[3] இவர் 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்று தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இந்திய விளையாட்டு வரலாற்றில் இந்தச் சாதனைபடைத்த முதல் பெண் சீருடற்பயிற்சி வீராங்கனை இவரேயாவார்.[4]. மேலும் இவர் புராடுநோவா என்னும் ஆபத்தான விளையாட்டான அந்தரத்தில் இரண்டு குட்டிக்கரணங்கள் போட்டு கால்பதிக்கும் விளையாட்டில் இதுவரை வெற்றிகரமாக விளையாடி முடித்த ஐந்து பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். மேலும், இவர் பங்குபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக (15.100) புள்ளிகள் எடுத்துச் சாதனைப் புரிந்துள்ளார்.[5] மேலும் இவர் 2015 ஆண்டு சப்பானில் நடந்த ஏ.ஆர்.டி.ஆசிய சீருடற்பயிற்சி போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தச் சாதனைகள் மூலமாக இந்தியாவில் சீருடற்பயிற்சியில் மிக இளவயதில் சாதனைப் படைத்தவர்.[6] ஏப்ரல் 2016 அன்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் சீருடற்பயிற்சி விளையாடுக்காகக் கலந்து கொள்ளத் தகுதி சுற்றில் 52.698 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக்கில் கந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார்.[2] இதன்மூலம் கடந்த 52 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சீருடற்பயிற்சி விளையாட்டில் கலந்துகொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவரானார்.[7] 2016 ஒலிம்பிக் போட்டி2016 ஒலிம்பிக்கில் புராடுநோவா பிரிவில் கலந்து கொண்ட தீபிகா தகுதிச்சுற்றில் மிக சிறப்பாகச் செயல்பட்டு 14.833 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் சீருடற்பயிற்சி பிரிவின் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தப் போட்டியில் நாகாகாவது இடத்தைப் பிடித்து நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அங்கிகாரங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia