துன்செலி மாகாணம்துன்செலி மாகாணம் (Tunceli Province குர்மஞ்ச் மொழி : parêzgeha Dêrsimê, துருக்கியம்: Tunceli ili[1] ), முன்னர் டெர்சிம் மாகாணம், என அழைக்கப்பட்டது, துருக்கியின் கிழக்கு அனடோலியா பகுதியில் அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் மக்கள் தொகையில் பெரும்பாலும் அலெவி ஜாசாஸ் [2] ( குர்து மக்கள் மற்றும் ஜாசா பேசும் குர்துகள்) போன்றவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த மாகாணத்திற்கு முதலில் டெர்சிம் மாகாணம் ( டெர்சிம் விலாயெட்டி ) என்று பெயரிடப்பட்டது. பின்னர் இது ஒரு மாவட்டமாக ( டெர்சிம் கசாஸ் ) தரமிறக்கப்பட்டு 1926 இல் எலாஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[3] இது இறுதியாக 1936 சனவரி 4 இல் துன்செலி மாகாணமாக " துன்செலி மாகாணத்தின் நிர்வாகச் சட்டம்" ( துன்செலி விலாயெட்டினின் ஆடரேசி ஹக்கந்தா கனூன் ) [4] 1935 திசம்பர் 25 இல் எண் 2884,[5][6][7] என்பதன்படி மாற்றப்பட்டது. ஆனால் சிலர் இப்பகுதியை அதன் அசல் பெயரால் ( டெர்சிம் மாகாணம் ) அழைக்கிறார்கள். மாகாண தலைநகரான கலனின் என்ற பெயர் பின்னர் அதிகாரப்பூர்வமாக துன்செலி என மாற்றப்பட்டது. இதன் அண்டை மாகாணங்களாக வடக்கு மற்றும் மேற்கில் எர்சின்கான் மாகாணம், தெற்கே எலாசே மாகாணம், கிழக்கே பிங்கல் மாகாணம் ஆகியவை உள்ளன. இந்த மாகாணம் 7,774 km2 (3,002 sq mi) பரப்பவு கொண்டதாகவும் மற்றும் 76,699 மக்கள் தொகையைக் கொண்டதாகவும் உள்ளது. இது துருக்கியின் அனைத்து மாகாணங்களையும்விட மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளது. இங்கு உள்ள மக்கள் அடர்தியானது வெறும் 9.8 மக்கள் / கிமீ 2 ஆகும் . மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களாக ஜாசா .[2] அலெவி இனத்தவரை கொண்ட துருக்கியின் ஒரே மாகாணம் துன்செலி ஆகும் . துன்செலி அதன் பழைமையான கட்டிடங்களான எலேபி அனா பள்ளிவாசல்,[8] சாமன் பள்ளிவாசல்,[9] எல்டி ஹதுன் பள்ளிவாசல் மற்றும், அதை ஒட்டிய கல்லறை,[10] மஸ்கர்ட் கோட்டை உள்ளிட்ட கோட்டையகங்கள்,[11] பெர்டெக் கோட்டை,[12] டெருன்-ஐ ஹிசார் கோடயகம்,[13] மற்றும் குறிப்பாக இயற்கை காட்சிகள், குறிப்பாக முன்சூர் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் உள்ள, துருக்கியின் மிகப்பெரிய தேசிய பூங்கா போன்றவை பயணிகளைக் கவரக்கூடியவை ஆகும். நிலவியல்துன்செலி உள்ள பகுதியானது சம அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் வடகிழக்கு கோட்டு செல்லக்கூடிய பகுதியில் உள்ளது. மாவட்டங்கள்துன்செலி மாகாணம் எட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. துன்செலி ஒரு தனித்துவமான மாகாணம் என்றாலும், இது 1947 வரைஎலாஸிலிருந்து நிர்வகிக்கப்பட்டது. கல்விதுன்செலியின் மக்கள்தொகையில் தொண்ணூற்றெட்டு சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் தொடக்கப் பள்ளிக் கல்வியைக் கொண்டிருள்ளனர். இது துருக்கியில் உள்ள மாவட்டத்திற்கான கல்வியறிவின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். 1979/1980 ஆம் ஆண்டில், துன்செலி பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களையும், அதிகப்படியான மாணவர் சேர்க்கையையும் கொண்டிருந்தது. இந்நிலையானது இங்கிருந்த ஒரே உயர்கல்வி பள்ளி மூடப்பட்டு இராணுவ தளமாக மாற்றப்படும் வரை நீடித்தது. துன்செலி பல்கலைக்கழகம் 2008 மே 22 அன்று நிறுவப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள், பொருளியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியியல், தொழில்துறை பொறியியல், மின்னணு பொறியியல், கணினி பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் ஆகிய துறைகளைக் கொண்டுள்ளது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia