தென்கிழக்காசிய உயர்க்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு![]() தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பு (மலாய்:Persatuan Institusi Penyelidikan Tinggi Asia Tenggara; ஆங்கிலம்:Association of Southeast Asian Institutions of Higher Learning என்பது ஓர் அரசு சாரா கூட்டமைப்பு ஆகும். தென்கிழக்காசியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், தங்களின் சொந்த முயற்சிகளின் மூலமாக ஆராய்ச்சிகள் செய்வது; கற்பித்தல் மற்றும் பொதுச் சேவைகளில் தனித்துவத்தை அடைவது; தங்களுக்குள் உதவிகள் செய்து கொள்வது; போன்ற கல்விசார் திட்டங்களுக்காக, 1955 சனவரி மாதம் தாய்லாந்து, பாங்காக் மாநகரில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு ஆகும்.[1] இந்தக் கூட்டமைப்பு, தென்கிழக்காசியாவின் பழமையான பிராந்திய அமைப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாங்காக் சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் நின்னாட் ஓலன்வொரவுத் என்பவர் ஆவார்.[2] உறுப்பினர்கள்2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, தென்கிழக்காசிய உயர் கல்விக் கழகங்களின் கூட்டமைப்பில் 25 நாடுகளைச் சார்ந்த 246 கல்வி நிறுவனங்கள் உறுப்பியம் பெற்றுள்ளன.[3]
தோற்றுநர்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia