தென் வியட்நாம்
வியட்நாம் குடியரசு எனப்படும் தென் வியட்நாம் (South Vietnam, வியட்நாமியம்: வியட்நாம் சோங் கோவா), 1955 முதல் 1975 வரை வியட்நாமின் தென்னரைப் பகுதியை ஆட்சி செய்த அரசமைப்பாகும். இது 1949 இல் "வியட்நாம் அரசு (State of Vietnam)" என பன்னாட்டளவில் ஏற்கப்பட்டது (1949;55), பின்னர் இது "வியட்நாம் குடியரசு (Republic of Vietnam)" ஆக மாறியது (1955;75). இதன் தலைநகரம் சாய்கோன் ஆகும். தென் வியட்நாம் எனும் பெயர் 1954 இல் நடந்த செனிவா மாநாட்டுக்குப் பிறகு பரவலாகப் பயன்படலாயிற்று. இம்மாநாடு வியட்நாமை பொதுவுடைமையை ஏற்கும்/ ஏற்காத இருவகைப் பிரிவுகளாகப் பிரிந்தது. நிகோ தின் தியேமைத் தலைவராகக் கொண்டு வியட்நாமியக் குடியரசு 1955 அக்தோபர் 26 இல் அறிவிக்கப்பட்டது.[1] இதன் இறையாண்மையை அமெரிக்காவும் 87 நாடுகளும் ஏற்றன. இது பல பன்னாட்டவையின் சிறப்புக் குழுக்களில் உறுப்பினராக விளங்கியது. உருசியா 1957 இல் பன்னாட்டவையின் உறுப்பினராக தன் தன்சிறப்புரிமையைக் கொண்டு மருக்காமல் இருந்திருந்தால் இது பன்னாட்டவையின் உறுப்பினராகி இருக்கும்.[2][3] தென்வியட்நாமின் தோற்றம் பிரெஞ்சு குடியேற்ரப் பகுதியாக விளங்கிய கொச்சின்சீனாவில் தொடங்குகிறது. இதில் வியட்நாமின் தென்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. இது பிரெஞ்சு இந்தோசீனாவின் ஓர் உட்பிரிவாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஓ சி மின் தலைமையிலான வியட் மின் படை 1945 செப்டம்பரில்கனோயில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசை நிறுவியதை அறிவித்தது. 1949 இல் பொதுவுடைமை எதிர்ப்பு வியட்நாம் அரசியல்வாதிகள் சாய்கோனில் ஓர் மாற்று எதிர்ப்பு அரசை பேரரசர் பாவோ தாய் தலைமையில் உருவாக்கினர். பாவோ தாய் முதன்மை அமைச்சர் நிகோ தின் தியேமால் நீக்கப்பட்டு முன்னவர் தானே குடியரசின் தலைவர் என வியட்நாம் வாக்கெடுப்பிற்குப் பிறகு அறிவித்துக்கொண்டார் . ஒரு படைக்கிளர்ச்சியில் துவோங் வான் மின்னால் நிகோ தின் தியேம் 1963 இல் கொல்லப்பட்டதும் தொடர்ந்து பல குறுங்காலப் படையாதிக்க அரசுகள் நிலவின. படைத் தளபதி நிகுயேன் வான் தியேயு 1967 முதல் 1975 வரை நாட்டின் தலைமையைத் தாங்கினார். வியட்நாம் போர் 1959 இல் வியட் காங் படை ஆயுதமேந்தி வியட்நாம் மக்களாட்சிக் குடியரசில் கிளர்ச்சியில் ஈடுபட்ட்தும் தொடங்கியது. 1968 இன் தெத் எதிர்ப்பின் பின்னர் போர் உச்சக்கட்ட்த்தை அடைந்தது அப்போது 1.5 மில்லியன் வியட்நாமிய வீrர்ர்களும் 500,000 அமெரிக்க வீர்ர்களும் தென்வியட்நாமில் இருந்தனர். 1973 இல் ஏற்பட்ட பாரிசு அமைதி உடன்படிக்கைக்குப் பிறகும், போர் வடக்கு வியட்நாமும் வியட் காங் படயும் 1975 ஏப்பிரல் 30 இல் சாய்கோனைக் கைப்பற்றி தென்வியட்நாம் அரசை வீழ்த்தும் வரை தொடர்ந்தது. தலைவர்கள்இக்குடியரசு முதல் இந்தோசீனப் போரின் முடிவில் பிரான்சு .வியட்நாமுக்கு விடுதலை வழங்கும் கோரிக்கையை மறுக்கவே இது உருவாக்கப்பட்டது. இந்த அரசி 1947 இல் தற்காலிகத் தென்வியட்நாம் குடியரசு என வியட்நாமை ஒருங்கிணைக்கப் போவதாக்க் கூறிப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. [4]
இந்த "முந்து வியட்நாம்" அரசு ஒருங்கிணைந்த வியட்நாம் அரசை உருவாக்க ஆயத்தம் செய்தது. என்றாலும் கொச்சின் சீனாவின் சட்டக் காரணங்களால் இம்முயற்சி ஓராண்டு காலம் தள்ளிப் போக நேர்ந்தது.
![]() மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia