தெ. வ. இராசரத்தினம்
நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம் (Tellipalai Wanarajah Rajaratnam, 21 டிசம்பர் 1920 - 15 சனவரி 1994) இலங்கையின் ஒரு முன்னணித் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பருவ நீதிமன்ற ஆணையராகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். ஆரம்ப வாழ்வுஇராசரத்தினம் யாழ்ப்பாண வழக்கறிஞர் டி. சி. இராசரத்தினம் என்பவருக்கு இரண்டாவது மகனாக[1] 1920 டிசம்பர் 21 இல் பிறந்தார். தந்தை இலங்கை அமெரிக்க மிசனின் தலைவராகவும், மலாயன் இலங்கை புகையிலைக் கம்பனியின் தலைவராகவும் இருந்தவர்.[1] இராசரத்தினம் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தின் சிறப்புப் பட்டம் பெற்றார்.[2] பணிஇராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார்.[2] 1951 இல் இலண்டன் லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பி அங்கு பணியாற்றினார். மகாதேவன் சதாசிவம் வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார்.[3] இதன் பின்னர் நீதித் துறை சேவையில் இணைந்து, 1970 இல் பருவ நீதிமன்ற ஆணையராக நியமனம் பெற்றார்.[2] 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியில் இருந்தார்.[2] அரசியலில்1989 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார்.[2] எழுதிய நூல்கள்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராசரத்தினம் A Manual of Industrial Law, Plantation Workers' Manual ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.[2] அத்துடன் இவர் எழுதிய A Judiciary in Crisis?: The Trial of Zulfikar Ali Bhutto என்ற நூலுக்கு[4] பாக்கித்தானின் இலால்-இ-கைத்-இ-அசாம் விருது வழங்கப்பட்டது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia