தேசிய தொலையுணர்வு மையம்தேசிய தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre) இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் ஓர் மையமாகும். இம்மையம் ஐதராபாத் நகரின் தெற்கே 60 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் இயங்கி வருகின்றது.[1] இந்திய தொலையணர்வு செயற்கைக்கோள் கொடுக்கும் தகவல்களை மதிப்பீடு செய்து, பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது இதன் பணியாகும். நீர்நிலைத் தகவல்கள், வேளாண்மை, மண் மற்றும் நில மேலாண்மை, தாது பொருட்கள் கண்டறிதல், நிலத்தடி நீர் தகவல்கள், நில அளவிடுதல், கடல் மேலாண்மை மற்றும் மீன் கண்டறிதல், சுற்றுசூழல் நிலை, காடு மற்றும் சார்ந்த தகவல்கள், நகர் திட்டமிடுதல் ஆகிய பணிகளுக்கு தகவல்களை இம் மையம் கொடுக்கின்றது. நிதிதேசிய தொலையுணர்வு மையங்கள் பெரும்பாலும் மாநில மற்றும் மத்திய அரசின் நிதியினால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் செயற்கைக்கோள் அனுப்பும் படங்களை விற்பனை செய்வதன் மூலம் வணிகத்தையும் மேற்கொண்டு வருவாய் ஈட்டுகிறது. பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளுக்கு ஆலோசனையினையும் வழங்குகிறது. தகவல் அறியும் உரிமை எண்: என்.ஆர்.இ.எஸ்.சி / ஆர் / இ / 20/00021, வருவாய் மற்றும் மானிய மதிப்புகள் 2014 முதல் 2019 ஆண்டு வரை வெளியிடப்படுகின்றன. தேசிய தொலையுணர்வு மையத்தின் ஆண்டு வாரியான வருவாய் விவரம்
மேற்கோள்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.nrsc.gov.in/aboutus.html பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia