தேசிய விவசாயிகள் ஆணையம்
தேசிய விவசாயிகள் ஆணையம் (National Commission on Farmers (NCF)) என்பது இந்திய அரசால் 18 நவம்பர் 2004 அன்று பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் ஆகும். இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை குறித்து விரிவாக விசாரணை செய்து நாடு தழுவிய பேரிடர் நிவாரணங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய இந்த ஆணையம் அமைக்கப்பட்டது .[1][2] ஆணையத்திற்கான விசாரணை குறிப்பு விதிமுறை வரம்புகள் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் பட்டியலிடப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலித்தன. இந்த ஆணையம் முறையே டிசம்பர் 2004, ஆகத்து 2005, திசம்பர் 2005 மற்றும் ஏப்ரல் 2006 ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தது. ஐந்தாவது மற்றும் இறுதி அறிக்கை 4 அக்டோபர் 2006 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. "வேகமான மற்றும் கூடுதல் உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற இலக்கை அடைய ஆணையத்தின் அறிக்கைகள் பரிந்துரைகளைக் கொண்டிருந்தன. 11 வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அணுகுமுறையில் திட்டமிடப்பட்டுள்ளபடி, இந்த ஆணைத்தின் அறிக்கை “விவசாயிகளுக்கான எம். எஸ். சுவாமிநாதன் அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது[1][3] ஆணையத்தின் இறுதி அறிக்கையில் விவசாயிகளின் துயரத்திற்கான காரணங்கள் மற்றும் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்தது. மேலும் முழுமையான தேசிய கொள்கை மூலம் விவசாயிகளுக்கான நிவாரணங்களைப் பரிந்துரைத்திருந்தது.[4] விவசாயிகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தேசிய கொள்கையில் இணைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகளில் நிலம், நீர் ஆகியவற்றை உள்ளடக்கிய சொத்து சீர்திருத்தங்கள் அடங்கும். மேலும்கால்நடைகள், மற்றும் உயிரிவளங்கள், விவசாயிகளுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன [5] ஆணையத்தின் அமைப்புவிவசாயிகள் தொடர்பான மறுகட்டமைக்கப்பட்ட தேசிய ஆணையத்தின் அமைப்பு பின்வருமாறு:[6]
ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள்
செயல்படுத்தல்ஆணையத்தின் பரிந்துரைகளில் சில அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மேலும் வாசிக்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia