தேவேந்திர பிரசாத் யாதவ்
தேவேந்திர பிரசாத் யாதவ் (Devendra Prasad Yadav)(பிறப்பு 26 நவம்பர் 1953) இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் பீகாரின் ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இராச்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] யாதவ் 1977 முதல் 1979 வரை பீகார் ஜனதா கட்சியின் செயலாளராக இருந்தார். சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பீகார் முதல்வராக ஆன கர்ப்பூரி தாக்கூருக்காகப் பதவி விலகினார். யாதவ் யுவ லோக் தளத்தின் தேசியத் தலைவராகவும் இருந்தார். 1989 முதல் 1998 வரை மற்றும் 1999 முதல் 2009 வரை ஜஞ்சர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஜூன் 1996-ல் தேவகவுடா அமைச்சகம் மற்றும் குஜ்ரால் அமைச்சகத்தில் வர்த்தகத்தின் கூடுதல் பொறுப்புடன் உணவு, குடிமைப்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான மத்திய அமைச்சரவையின் அமைச்சராக இருந்தார். இந்த பதவிக் காலத்தில், விவசாயிகளுக்கான உணவு மசோதாவை நிறைவேற்றினார். இது பாராட்டத்தக்கது. யாதவ் மக்களவையில் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருந்தார். ஆனால் இராச்டிரிய ஜனதா தளத்தில் இணைவதற்காகப் பதவியிலிருந்து விலகினார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தை விட்டு வெளியேறிய பிறகு சமாஜ்வாதி ஜனதா தளம் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். ஆனால் விரைவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் தனது கட்சியை இணைத்து மீண்டும் சேர்ந்தார்.[2][3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia