தொகாநிலைத்தொடர்சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர். சொற்றொடரென்பது வாக்கியத்திலிருந்து வேறுபட்டது. சொற்றொடரில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை தனித்தனியே வந்தால் சொற்றொடராகா. பல சொல்லோ பல சொற்றொடர்களோ (தனித்தனியே) வரின் அது வாக்கியமாகும். எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய - தொல்காப்பியர் ஒரு தொடரில் இரண்டு சொற்கள் அமைந்து அவற்றுக்கிடையில் சொல்லோ, உருபோ (தொக்காமல்) மறையாமல் நின்று பொருளை உணர்த்துவது "தொகாநிலைத்தொடர்" எனப்படும் தொகாநிலைத்தொடர்கள்
என்ற நூற்பா தொகாநிலைத் தொடர்கள் எவை எனக்கூறுகிறது.
எழுவாய்த்தொடர்எழுவாயைத்தொடர்ந்து பயனிலைவரும் தொடர் "எழுவாய்த்தொடர்" எனப்படும். விளித்தொடர்ஒருவரை அழைத்தற்பொருட்டு விளிக்குந்தொடர் விளித்தொடர் எனப்படும். அவ்வாறு விளியேற்கும் போது பெயர்ச்சொல்லின் கடை நீண்டு ஒலித்தல் இயல்பு. சான்று: முருகாவா இத்தொடரில் முருகனை விளித்தலால் விளித்தொடர் ஆகும். வினைமுற்றுத்தொடர்ஒரு வினை, முற்றுப்பெற்றதைக் குறித்த வினைமுற்று முதலில் வந்து பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் எனப்படும் பெயரெச்சத்தொடர்ஒரு எச்சவினை பெயர்ச்சொல்லோடு முடிந்தால் அது பெயரெச்சத்தொடர் எனப்படும். சான்று: 'பாடியப் பாட்டு' இத்தொடரில் 'பாடிய' என்ற எச்சவினை 'பாட்டு' என்ற பெயரைக்கொண்டு முடிந்தது. வினையெச்சத்தொடர்ஒரு எச்சவினை வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் வினையெச்சத்தொடர் எனப்படும். சான்று: 'ஓடிவந்தான்' இத்தொடரில் 'ஒடி' என்ற எச்சவினை 'வந்தான்' என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்தது வேற்றுமைத்தொடர்வேற்றுமையுருபு மறையாமல் வெளிப்படையாக வருந்தொடர் 'வேற்றுமைத்தொடர்' எனப்படும் இடைச்சொற்றொடர்தில், மன், மற்று, மற்றை, கொல், சோவென, பொள்ளென, திடுக்கென, போன்ற இடைச்சொற்கள் பெயரையோ, வினையையோ தொடர்ந்து வருவது இடைச்சொற்தொடர் எனப்படும். உரிச்சொற்றொடர்ஒரு தொடரில் பெயரயும், வினையையும் தொடர்ந்து உரிச்சொல் வருமாயின் அது 'உரிச்சொற்றொடர்' எனப்படும்
மேற்கோள்கள்உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia