தோ. சங்கர வாரியர்
தைக்கட்டுசேரி சங்கர வாரியர் (Thaikkattusery Sankara Warrier) (1797 - 23 அக்டோபர் 1856) இவர் ஒரு இந்திய அரசு ஊழியரும், நிர்வாகியுமாவார். இவர் 1840 முதல் 1856 வரை கொச்சி இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார். இவரது மகன்களான டி.சங்குன்னி மேனனும், டி. கோவிந்தன் மேனனும் கொச்சியின் திவான்களாக பணியாற்றியுள்ளனர். ஆரம்ப கால வாழ்க்கைசங்கர வாரியர் 1797 சனவரியில் திருச்சூருக்கு அருகிலுள்ள ஒல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை அம்பலவாசி குடும்பத்தில் பிறந்தார். சமசுகிருதத்தில் ஆரம்பகால பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, இவர் தனது 17 வயதில் எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தராக வேலைவாய்ப்பைப் பெற்றார். பின்னர், திவானின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். படிப்படியாக 24 வயதில் தலைமை ராயசம் (கடிதத் துறைத் தலைவர்) ஆனார். கொச்சி இராச்சியத்தில் எழுத்தராக சேர்ந்த இவர் 1840 இல் திவானாக உயர்ந்தார். திவானாக இவர் தனது நிர்வாக திறன்களுக்காக புகழ் பெற்றார். இது கொச்சி சுதேச மாநிலங்களிடையே முன்னணியில் உயர உதவியது. 1854 பிப்ரவரி 16 அன்று அடிமைத்தனத்தை ஒழிக்கும் பிரகடனத்தை வெளியிட மகாராஜா மீது நிலவியதற்காக சங்கர வாரியர் குறிப்பாக நினைவுகூரப்படுகிறார். இறப்புசங்கர வாரியர் 1856 இல் இறந்தார். இவருக்குப் பிறகு வெங்கட ராயர் என்பவர் திவானாக வந்தார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia