நடு இலையுதிர் கால திருவிழா
நடு இலையுதிர் கால திருவிழா அல்லது இடை-இலையுதிர்கால கொண்டாட்டம்(Mid-Autumn Festival, சீனம் :中秋節) என்பது சீனர் மற்றும் வியட்நாமியராலும் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக்கால விழாவாகும். [1][2] இந்தக் கொண்டாட்டம் கான் நாட்காட்டியிலும் மற்றும் வியட்நாமிய நாட்காட்டியிலும் எட்டாம் மாதம் 15ம் நாள் முழு நிலவன்று கொண்டாடப்படுகிறது. இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் கிரெகொரியின் நாட்காட்டியின் படி முன் செப்டம்பருக்கும் முன் அக்டோபருக்கும் இடையில் வரும் பூரணை இரவில் கொண்டாடப்படுகிறது.[1] இத்திருவிழா சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக் கொண்டாட்டத்தினை முதன்மைச் சீனா அருவ கலாச்சார பாரம்பரியம் ஆக 2006இல் குறிப்பிட்டது, மற்றும் 2008இல் பொது விடுமுறையாகவும் அறிவித்தது.[1] இது தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் பொது விடுமுறையாகும். வியட்நாமிய கலாச்சாரத்தில், இது இரண்டாவது முக்கிய விடுமுறை தினமாகும். சீன மக்களின் கொண்டாட்டங்களில் முதன்மை இடத்தைப் வகிப்பது வசந்தவிழா ஆகும். அதனை அடுத்து வரும் மகத்தான ஒரு கொண்டாட்டமாக விளங்குவது இந்த இடைஇலையுதிர்கால கொண்டாட்டமாகும். அருமையான சிதோசன நிலை காணப்படும் இம்மகத்தான கொண்டாட்டம்; சந்திரன் இந்த நாள் வட்ட வடிவமாக காணப்படுவதால் சந்திர விழா எனவும் போற்றிக் கொண்டாடுவர். பூரண சந்திரன் அமைதிக்கும் சௌபாகியத்திற்கும் குடும்பங்கள் மீளச் சந்திப்பதற்குமான அடையாளமெனவும் சீன மக்கள் நம்புகின்றனர். வேறு பெயர்கள்இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றுள் சில:
திருவிழாவின் நோக்கம்இத்திருவிழாவின் நோக்கம் ஒன்று கூடுதல், நன்றி செலுத்துதல், பிரார்த்தனை செய்தல் போன்றனவாக்கும். தோற்றம்சீனர்கள் ஷாங் வம்சம் முதலே இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டாங் வம்சத்தின்போது இத்திருவிழா மேலும் புகழ் பெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பேரரசி டோவாகர் சிக்சி காலத்தில் சீன நாட்காட்டியின் 8 -வது மாதத்தில் 13 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள்வரை இவ்விழா கொண்டாடப்பட்டது.[4] விளக்குஇப்பண்டிகையின் போது உயரமான கோபுரங்களில் வண்ண விளக்குகளை ஏற்றுவர். சீனர்களின் பாரம்பரியப்படி விளக்கானது கருவுறுதலின் சின்னமாகும். மேலும் விளக்கு அலங்காரத்திற்காகவும் ஏற்றப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருவிழாவுக்காகவே விளக்கு ஏற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் விளக்கானது இயற்கைப் பொருட்களால் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டன. கொண்டாட்டம்இக்கொண்டாடத்தில் முக்கிய இடம் வகிப்பன சிங்கம் நடனம் மற்றும் டிராகன் நடனம் ஆகும். இடை-இலையுதிர்கால கொண்டாட்டத்தில் கடவுளுக்காக போலி பணங்களை எரித்தல் போன்றது நடைபெறும். சிறப்பு உணவு![]() இக்கொண்டாட்டத்தின் போது பிரபல கலாசார உணவாக நிலவு ரொட்டி (Moon cake) அல்லது மூன் கேக் விளங்குகிறது. இதன் காரணமாக இக்கொண்டாட்டத்திற்கு நிலவு ரொட்டி விழா என்ற பெயரும் காணப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia