நண்பேன்டா (திரைப்படம்)
நண்பேன்டா (Nannbenda) என்பது, ஜகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [1]இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். நடிப்பு
படப்பிடிப்புஇயக்குநர் ராஜேஷின் உதவி இயக்குநர் ஜகதீஷ் இயக்கும் நண்பேன்டா எனும் திரைப்படத்தைத் தாயாரித்து, சந்தானத்துடன் இணைந்து தானும் நடிக்கவிருப்பதாக 2013ம் ஆண்டு சூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்[2]. இப்படத்தின் நாயகியாக முதலில் காஜல் அகர்வாலை தேர்ந்தெடுத்தனர்[3]. அதற்காக அவருக்குக் குறிப்பிட்ட தொகையும் முன்பணமாக பெற்றுக் கொண்டார், காஜல். படத்திற்கு முறையான தேதிகள் வழங்கப்படாத நிலையில், வேறு சில தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்[4][5]. இரண்டு மாதங்கள் பொறுத்திருந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, பின்னர் படத்தின் நாயகியாக நயன்தாராவை தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார்[6]. மேலும் இப்படத்தில் தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது[7]. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பாளராகம், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டது. உதயநிதி, ஹாரிஸுடன் நடிகராக மூன்றாவது முறையும், தயாரிப்பாளராக ஐந்தாவது முறையாகவும் இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை
ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். சோனி நிறுவனத்தின் மூலம் 2014ம் ஆண்டு திசம்பர் 23ம் நாள் படத்தின் இசை வெளியிடப்பட்டது[8]. இசைவெளியீட்டு விழாவில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் வெளிவந்த முதல் நாளே ஐடியுன்சில் (iTunes) முதலிடம் பிடித்தது[9].
சந்தைப்படுத்துதல்இத்திரைப்படத்தின் முதல் சுவரொட்டி 2014 ஆண்டு சனவரி மாதம் வெளிவந்தது. திரைப்படத்தின் முன்னோட்டம், 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது[10]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia