நந்தவனம்![]() நந்தவனம் (Nandhavanam) என்பது பழங்கால சிவன், திருமால், முருகன் கோயில்களில் காணப்படும் ஒரு தோட்டம் ஆகும். நந்தவனத்தில் பொதுவாக வாசனைமிகு பூச்செடிகள் மட்டுமல்லாது இயல் மரங்கள், மூலிகைச் செடிகள் போன்றவையும் கொண்டதாக இருக்கும். அர்ச்சனை செய்வதற்கு, திருமால் கோயில்களின் நந்தவனத்தில் கூடுதலாக துளசிச் செடிகளும், சிவபெருமான் கோயில்களில் கூடுதலாக வில்வ மரங்களும் வளர்க்கப்படும். கோயில் தலமரத்தை நந்தவனத்தில் வைத்து வளர்க்கும் வழக்கம் இருந்துள்ளது. நந்தவனத்தில் இருக்கும் புன்னை, இலுப்பை போன்ற மரங்களில் இருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு எண்ணை எடுக்கபட்டு கோயிலில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தபட்டன. நந்தவனத்தைப் பராமரிக்கவும், நந்தவனத்தில் கிடைக்கும் பூக்களைக் கொய்து, இறைவனுக்கு மாலையாக தொடுப்பதற்கும் நந்தவனக் குடி, பண்டாரம் ஆகிய சமூகத்தவர்களின் கடமையாக இருந்தது. பழமையான கோயில்களில் கல்லால் செதுக்கபட்ட பூப்பலகை இருக்கும். நந்தனவனத்தில் கொய்யப்படும் பூக்கள் பூப்பலகையில் கொட்டி, அதைச் சுற்றி அமர்ந்து பூத்தொடுப்பர். கோயில் நந்தவனம் அமைக்க நிலத்தை தானமாக அளித்தற்கு கல்வெட்டுகள்க் குறிப்புகள் உள்ளன.[1] ஒரு பகுதியில் காணப்படும் இயல் தாவரங்களின் பாதுகாப்பகமாக நந்தவனங்கள் இருந்துள்ளன. தெய்வங்களின் பெயரோடு அந்த மரங்களின் பெரரை இணைத்து வேணுவன நாதர், கடம்பவன நாதர், புன்னைவன நாதர், தில்லைக் கூத்தர் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.[2] புகழ்பெற்ற நந்தவனங்கள்தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் பழமையான நந்தவனத்தில் நூற்றுக்கணக்கான சங்குவளை நாரைகள், கூழைக்கடாக்கள், கொக்குகள் போன்ற பல பறவை இனங்கள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.[3] அதுமட்டுமல்லாது ஆயிரக்கணக்கான பழந்திண்ணி வௌவால்கள் இந்த மரங்களில் தங்குகின்றன. இந்த நந்நவனம் 2002 ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கபட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia