நம்ம ஊரு மாரியம்மா (திரைப்படம்)
நம்ம ஊரு மாரியம்மா (Namma Ooru Mariamma) 1991 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை கே. ராஜன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் வைதேகி ஆகிய இருவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சரத்குமார், ஜெய்கணேஷ் மற்றும் கே. ஆர். விஜயா உடன் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை சங்கர் கணேஷ் இது 14 பிப்ரவரி 1991இல் வெளிவந்துள்ளது..[1] கதைச்சுருக்கம்மாரியம்மா (கே. ஆர். விஜயா) தனக்கு திருமணமாகி நீண்ட நாளாகியும் குழந்தையில்லாததால் கவலை கொள்கிறார். இதற்காக அவரது கணவன் மற்றும் அவரது சகோதரன் முத்துவும் (நிழல்கள் ரவி) சேர்ந்து ஊரிலுள்ள செல்வந்தன் ராஜதுரையின் (சரத்குமார்) உதவியுடன் ஊர் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ராஜதுரை ஊர் மக்களை ஏமாற்றி கோவில் சொத்துகளை கொள்ளையடித்து வருகிறான். இதற்கிடையே முத்து காவேரி மீது காதல் கொள்கிறான். திருவிழா முடிந்ததும் ராஜதுரையின் தவறுகள் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதை தட்டி கேட்ட முத்து ஊர்மக்கள் உதவியுடன் அவனை நீதியின் முன் நிற்க வைக்கிறான். நீதி கிடைக்குமென்று காத்திருக்கிறார்கள். இதனால் ராஜதுரையின் அடியாட்கள் மாரியம்மாவின் கணவனை கொலை செய்துவிடுகின்றனர். பின்னர் முத்துவிற்கும், காவேரிக்கும் திருமணம் நடைபெறுகிறது. ராஜதுரை இவர்களை பழி வாங்க நினைக்கிறான். இறுதியில் என்ன நடந்தது என்பதே மீதிக் கதையாகும். நடிகர்கள்
ஒலித்தொகுப்பு
இப்படத்திற்கு வாலி, மு. மேத்தா, உளுந்தூர்பேட்டை சண்முகம் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் ஐந்து பாடல்களை எழுத சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளனர்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia