நளினி அனந்தராமன்
நளினி அனந்தராமன் (Nalini Anantharaman)(பிறப்பு: பிப்ரவரி 26, 1976) பிரெஞ்சு கணிதவியலாளர் ஆவார். இவர் 2012-ல் ஹென்றி பாய்கேரே பரிசு உட்பட முக்கிய பரிசுகளை வென்றுள்ளார். வாழ்க்கைநளினி புளோரன்சு அனந்தராமன் 1976-ல் பாரிஸில் இரண்டு கணிதவியலாளர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை மற்றும் தாயார் ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆவர். இவர் 1994-ல் எகோல் நார்மல் சுபீரியர் இல் நுழைந்தார். இவர் 2000ஆம் ஆண்டில் பிராங்கோயிசு லெட்ராப்பியர் ஆய்வு வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பாரிஸில் தனது முனைவர் பட்டத்தினை முடித்தார்.[2][3] 2009ஆம் ஆண்டில், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் மில்லர் பேராசிரியராகப் பணியாற்றியதைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டில் ஆர்சேயின் பாரிஸ்-சுட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். சனவரி முதல் சூன் 2013 வரை இவர் பிரின்ஸ்டனில் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் இப்போது ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[2] அங்கீகாரம்2012ஆம் ஆண்டில் நளினி கணித இயற்பியலுக்கான ஹென்றி பாய்கேரே பரிசை வென்றார். இதை இவர் ஃப்ரீமேன் டைசன், பாரி சைமன் மற்றும் சக பிரெஞ்சுப் பெண்மணி சில்வியா சமூகத்துடன் பகிர்ந்து கொண்டார்.[4] அனந்தராமன் "குவாண்டம் ஒழுங்கற்ற துணுக்கம், இயக்க அமைப்பு மற்றும் சுரோடிங்கர் சமன்பாடு, துணுக்க தனித்துவமான நிகழ்வொழுங்கு முறை நிகழ்விரவல் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.[5] 2011-ல் இவர் பூரியர்தொடர் தொடர்புடைய பணிக்காக வழங்கப்படும் சேலம் பரிசை வென்றார். இவர் கிராண்ட் பிரிக்ஸ் ஜாக் ஹெர்பிரான்ட் பரிசினை 2011-ல் பிரெஞ்சு அறிவியல் அகாதமி வழங்கப் பெற்றுக்கொண்டார்.[3][6] 2015ஆம் ஆண்டில், நளினி அனந்தராமன் அகாதமியா ஐரோப்பாவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 2018-ன் அனைத்துலக கணித அறிஞர் பேரவையின் முழுமையான பேச்சாளராக இருந்தார்.[8] 2018ஆம் ஆண்டில், "குவாண்டம் ஒழுங்கற்ற துணுக்கம்" தொடர்பான இவரது பணிக்காக, அனந்தராமன் இன்போசிஸ் பரிசை (கணித அறிவியல் பிரிவில்) வென்றார். இது அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இந்தியாவின் மிக உயர்ந்த பண விருதுகளில் ஒன்றாகும்.[9] 2020 ம் ஆண்டில் இவர் கணிதத்தில் நெம்மர்ஸ் பரிசைப் பெற்றார்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia