நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
![]() நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை (1910 – 1964) என்பவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்நாட்டுத் தவில் கலைஞர். வாழ்க்கைக் குறிப்புஇராகவப்பிள்ளை தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோயிலில் பாரம்பரிய இசைவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் பக்கிரியாப் பிள்ளை, கண்ணம்பாள் ஆகியோருக்கு மகனாக நவம்பர் 8, 1910ல் பிறந்தார். இவரது சகோதரர்கள் நடன ஆசிரியர் இராமச்சந்திரம் பிள்ளை மற்றும் இசைக்கலைஞர்கள் ரெங்கசாமி பிள்ளை, நடராஜப் பிள்ளை ஆகியோர். இவருக்கு காமு, அம்மணி, வஞ்சுவள்ளி என்ற சகோதரிகளும் உண்டு. இராகவப்பிள்ளை திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளையிடம் இரண்டு ஆண்டுகளும், பின்பு நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் குருகுல வாசமாக பதினோரு ஆண்டுகளும் தவில் பயின்றார். இவரது திறமையையும், பண்பையும் கண்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தன் மகள் ஜெயலட்சுமியை மே 7, 1935ல் இவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இராகவப்பிள்ளைக்கு கமலா, கோமதி, வேம்பு, பிரேமா, சித்திரா என்ற ஐந்து மகள்களும், வாசுதேவன் என்ற மகனும் பிறந்தார்கள். இவர் இரத்த அழுத்த நோயால் ஏப்ரல் 10, 1964 இயற்கை எய்தினார். கலை வாழ்க்கைஉடன் வாசித்த நாதசுரக் கலைஞர்கள்
பயிற்றுவித்த மாணவர்கள்
பெற்ற பட்டங்கள்
சிறப்புகள்
நூற்றாண்டு விழாஇராகவப்பிள்ளையின் நூற்றாண்டு விழா நவம்பர் 11, 2011 அன்று கும்பகோணத்தில் உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவரக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் மாண்டலின் யு. ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் கோ.சி.மணி நூற்றாண்டு விழா மலரை வெளியிட ஜி. ரெங்கசாமி மூப்பனார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டு விழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார். உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia