நாடு கடந்த அரசாங்கம்நாடு கடந்த அரசாங்கம் (government in exile) என்பது ஒரு அரசியல் குழு ஆகும். இது ஒரு இறையாண்மை கொண்ட நாடாகவும், முறையான அரசாங்கம் கொண்டிருப்பினும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இத்தகைய நாடு தன் சொந்த நிலப்பரப்பில் அரசை நிர்வகிக்க இயலாது போனாலும், வேறு ஒரு நாட்டின் அனுமதியுடன் அந்நாட்டில் தனது அரசாங்கத்தை நிர்வகிக்கிறது.[1] இதற்கு எடுத்துகாட்டு இந்தியாவில் நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் ஆகும். போர்க்கால ஆக்கிரமிப்பின் போது அல்லது உள்நாட்டுப் போர், புரட்சி அல்லது சதித்திட்டம் ஆகியவற்றின் பின்னர் நாடு கடந்த அரசுகள் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஜெர்மனி தனது விரிவாக்கத்திற்காக நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, சில ஐரோப்பிய அரசாங்கங்கள் நாஜி ஜெர்மனி கைகளில் அழிவை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தன. இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவுக்கு எதிராக சுபாஷ் சந்திர போசால் நாடு கடந்த இந்திய அரசு மலேசியாவில் நிறுவப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியர்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்படுவதற்கும், நாட்டின் கட்டுப்பாட்டைப் பெற படையெடுக்கும் ஜப்பானியர்களின் ஆதரவைப் பெற காரணமாயிற்று. நாடுகடத்தப்பட்ட ஒரு அரசாங்கம், ஒரு ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான சட்டவிரோத அரசாங்கம் எனப்பரவலாக கருதப்படலாம். உதாரணமாக 2011-இல் சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததன் காரணமாக, சிரிய புரட்சிகர மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான தேசிய கூட்டணிக் குழுக்கள் உருவாக்கிய பாத் கட்சியின் அரசாங்கம், சிரியா நாட்டின் ஒரு பகுதியில் நிறுவப்பட்டது. நாடுகடத்தப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்திறன், வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்தோ அல்லது அதன் சொந்த நாட்டின் மக்களிடமிருந்தோ பெறும் ஆதரவைப் பொறுத்தது. நாடுகடத்தப்பட்ட சில நாடு கடந்த அரசாங்கங்கள் ஒரு வல்லமைமிக்க சக்தியாக உருவாகும் போது, அது நாட்டின் தற்போதைய ஆட்சிக்கு கடுமையான சவாலாக இருக்கும். மன்னராட்சிக் காலத்தில் நாடுகடத்தப்பட்ட மன்னர்கள் அல்லது வம்சங்கள், சில சமயங்களில் நாடு கடந்த நாட்டில் நீதிமன்றங்களை அமைத்துக் கொண்டனர.[2] பிரெஞ்சுப் புரட்சியின் போது மக்களால் தூக்கியெறியப்பட்ட பதினாறாம் லூயி மன்னரின் குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், நெப்போலியன் பொனபார்ட்டிற்கு எதிராகவும், 1803 முதல் 1815 முடிய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரஷ்யா, ஆஸ்திரியா நாடுகள் போரிட்டது அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சிகள் நாடு கடத்தப்படப் போது, அதன் பிரதம அமைச்சரும் சேர்ந்து நாடு கடத்தப்படுவது வழக்கம். இது போன்ற நிகழ்வு இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்வு, 10 மே 1940-இல் ஜெர்மனி, டச்சு நாட்டை ஆக்கிரமித்த போது, அதன் அரசி வில்ஹெல்மினாவும் மற்றும் பிரதம அமைச்சரும் இலண்டனில் நாடு கடந்த டச்சு அரசாங்கத்தை நிறுவினர். நாடு கடந்த அரசுகளின் செயல்பாடுகள்சர்வதேச சட்டம் நாடுகடத்தப்பட்ட அரசாங்கங்கள் தங்கள் அன்றாட விவகாரங்களை நடத்துவதில் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்பதை அங்கீகரிக்கிறது. இந்த செயல்களில் பின்வருவன அடங்கும்:
நாடு கடந்த அரசாங்கம் உள்ள நாட்டில் வாழும் நாடு கடந்த அரசின் மக்களை கட்டுப்படுத்தும் உரிமை, நாடு கடந்த அரசிற்கு உள்ளது. எடுத்துகாட்டாக மலேசியா தீபகற்பத்தில் வாழ்ந்த இந்தியர்களை, ஜப்பானிய இராணுவத்தின் ஆதரவுடன் நாடு கடந்த இந்திய அரசு கட்டுப்படுத்தியது. நாடு கடந்த அரசின் நடவடிககைகள்நாடு கடந்த அரசாங்கம், தனது அன்றாட நிர்வாகத்தை மேற்கொள்ள சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என சர்வதேச சட்டங்கள் ஆதரிக்கிறது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia