நாயுடுமங்கலம்
நாயுடுமங்கலம் (Naidumangalam) இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஓர் நகராட்சி ஆகும். இந்த ஊரின் மக்கள் தொகை 8,400 மற்றும் கடல் மட்டத்தில் இருந்து உயரம் 134மீ உயரத்தில் உள்ளது. நாயுடுமங்கலத்தில் ஒரு சிப்காட் கட்டப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது . போக்குவரத்துசாலைப் போக்குவரத்துஇந்த நகராட்சியானது தேசிய நெடுஞ்சாலை 234யில் விழுப்புரம் மற்றும் மங்களூர்க்கிடையே அமைந்துள்ளது இரயில் போக்குவரத்துஇந்த நகரத்திற்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையம் அகரம் சிப்பந்தி. இது வேலூர்-திருவண்ணாமலை ரயில் பாதைக்கு இடையே உள்ளது. திருவண்ணாமலைக்கு அருகே சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே இயக்குகிறது. வடக்கே போளூருக்கு அடுத்து வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையம் ஆகும். மற்றும் தெற்கே திருவண்ணாமலை இரயில் நிலையம் மிக அருகில் உள்ள பெரிய ரயில் நிலையம் ஆகும். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia