நா. கோவிந்தசாமி![]() நா. கோவிந்தசாமி (Naa.Govindasamy, ஏப்ரல் 18, 1946 – மே 26, 1999, அகவை 52) சிங்கப்பூரைச் சேர்ந்த கணினி அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.[1]"1995ம் ஆண்டு அக்டோபர் 27 இல் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் (en:Ong Teng Cheong) துவக்கி வைத்த Journeys: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளத்தில் (Poem Web) தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது." [2][3] இணையப் பங்களிப்புநா. கோவிந்தசாமி தமிழ்நெட், தமிழ்ஃபிக்சு போன்ற கணினி எழுத்துருக்கள் பயன்படுத்தும் சிங்கப்பூர் 16 பிட் ஒருங்குறித் திட்டத்தை மேம்பாட்டுக்காக உழைத்தார் இவரது சிங்கப்பூர் தமிழ் வெப் என்பது உலகளாவிய வலையில் வெளிவந்த உலகின் முதலாவது தமிழ் இணையப் பக்கம் ஆகும்.[4] 1999 பெப்ரவரியில் நடைபெற்ற தமிழ்நெட்99 இணைய மாநாட்டில் Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது.[5]
இலக்கியப் பங்களிப்புகோவிந்தசாமி 1965 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வந்தவர். 1990-ல் வேள்வி என்ற புதினத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[7][8] 1991 இல் உள்ளொளியைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பும் [9] 1977ஆம் ஆண்டில் இலக்கியக் களம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இவ்வமைப்பு மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை 1981-ல் வெளியிட்டது.[5] மேலும் 1992 இல் சிங்கப்பூர்த் தமிழ் சிறுகதைகள் எனும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்.[10][11] 1989-ல் மொரிசியசில் நடந்த ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டில் கணினிக்கு ஒரு புதிய விசைப்பலகை - சிங்கப்பூர் கல்விக் கழக அனுபவம் என்ற ஆய்வு கட்டுரையையும் முதல் தமிழ்ச் சிறுகதை என்ற ஆய்வு கட்டுரையையும் படித்தார், இக்கட்டுரைகள் இம்மாநாட்டு மலரில் சேர்க்கப்பட்டுள்ளது.[12] 1994 ஆகத்து 5, 6 ஆகிய நாட்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கணியன் விசைப்பலகை என்ற கட்டுரையைப் படித்தார்.[13] பங்காற்றிய நூல்கள்நா. கோவிந்தசாமி கீழ்க்கன்ட நூல்களுக்கு இணையாசிரியராக (Co Editor) பணியாற்றியுள்ளார் [10][11]
நா.கோவிந்தசாமி பற்றி நூல்களும் ஆய்வுகளும்
பெற்ற விருதுகள்நா.கோவிந்தசாமி கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றுள்ளார்
வகித்த பொறுப்புகள்நா.கோவிந்தசாமி சிங்கப்பூ்ர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் கீழ்க்காணும் பொறுப்புகளை வகித்துள்ளார்[11]
TamNet Pte Ltdநா.கோவிந்தசாமி 1996 இல் TamNet Pte Ltd என அறியப்பட்ட Tamil Network Publishing House Pte Ltd என்ற நிறுவனத்தை தொடங்கினார்.[19] இவரின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி உஷாவால் இந்நிறுவனம் மேலாண்மை செய்யப்பட்டது [20] இந்நிறுவனம் Kanian UV,கணியன் 2000 போன்ற தமிழ் எழுத்துரு மென்பொருட்களையும் செந்தமிழ் தமிழ்ச்சுடர் போன்ற சிறுவருகளுக்கான எழுத்துரு மென்பொருட்களையும் வெளியிட்டது [21] மேலும் தமிழ் தட்டச்சு வகுப்புகள் மற்றும் அனைத்து தகவல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியது[22] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia