நிறம் மாறாத பூக்கள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் பிப்ரவரி 21, 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 593 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
இந்த தொடரை ம. இனியன் தினேஷ், ப.நிரவி பாண்டியன் மற்றும் தனுஷ் ஆகியோர் இயக்க முரளி, நிஷிமா, அஷ்மிதா, முஹம்மட் அஸீம், தீபா ஜெயன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடரை பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி என்பவர் தயாரித்துள்ளார்.[3][4]
கதைச்சுருக்கம்
ராம் மற்றும் வெண்மதி சிறுவயது நண்பர்களாக இருக்கும் போது இருவரும் காதலித்தனர், ஒரு விபத்தில் ராம் பழைய நினைவுகளை மறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே நிலையில் சென்னைக்கு வருகின்றார், சில வருடம் கழிந்து ராம் கீர்த்தி எனும் பெண்ணை காதலிக்கிறார். தனது இளம் வயது காதலனை தேடி சென்னைக்கு வரும் வெண்மதி மறுபடியும் ராமை சந்திக்கிறாள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராம் வெண்மதியை திருமணம் செய்கின்றான். இந்த விடயம் கீர்த்திக்கு தெரியவர இவர்களின் மூவரின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது தான் கதை.