நீரிழிவு விழித்திரை நோய்
நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy)[1] என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் குருட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையுள்ளது[2]. இது, நீரிழிவினால் கண்ணில் ஏற்படும் மாற்றங்களைக் (சிக்கல்களை) உள்ளடக்கிய உள்பரவிய நோயாகும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்பது சதவிகித நோயாளிகளில் இவ் விழித்திரை நோய் உள்ளது[3]. என்றாலும், கண்களை நன்கு பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலமாகவும், சரியான, கவனமான சிகிச்சைகள் மூலமாகவும், குறைந்தபட்சம் தொண்ணூறு சதவிகித நேர்வுகளைக் குறைக்க முடியமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன[4]. நீரிழிவினால் பாதிக்கப்படுகின்ற காலம் அதிகமாகும்போது நீரிழிவு விழித்திரை நோய் உண்டாவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன[5]. நீரிழிவு விழித்திரை நோய் நான்கு முதன்மை நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது: 1. அடிப்படையானது 2. நீரிழிவு விழிப்புள்ளி நோய் (Diabetic maculopathy) 3. பெருக்கத்திற்கு முன்பானது (Pre-proliferative) 4. பெருக்கம் தொடர்பானது (Proliferative) நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து விழித்திரையின் மேல் இரத்தம் பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். லேசர் கதிர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம். அறிகுறிகள்![]() ![]() முன்னெச்சரிக்கை அறிகுறிகள் நீரிழிவு விழித்திரை நோய்க்கு ஏதுமில்லை. வெகு சீக்கிரமாக பார்வை இழப்பை உண்டாக்கும் விழிப்புள்ளி திரவக் கோர்வைக்கும் (macular edema) சில காலத்திற்கு முன்னெச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம். பொதுவாக, விழிப்புள்ளி திரவக் கோர்வை உள்ளவர்கள் படிப்பதற்கும், வண்டிகளை ஓட்டுவதற்கும் மிகவும் கடினமான இருக்கும் வகையில் மங்கலான பார்வையை கொண்டிருப்பார்கள். சில நோயாளிகளில் ஒரு நாளைக்குள் பார்வை மேம்பட்டோ அல்லது இன்னும் மோசமாகவோ போகலாம். மேலும் பார்க்கஉயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia