நெடுஞ்செழியன் (மாங்குளம்)

மாங்குளம் நெடுஞ்செழியன் கல்வெட்டு மாதிரி எழுத்துக்கள்

நெடுஞ்செழியன் என்ற பெயர் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு பாண்டிய மன்னனின் பெயராகும். இக்கல்வெட்டுகளின் காலம் பொ.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இவனின் முழுப்பெயர் தெரியவில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையலங்கான நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு இவன் முன்னோனாக கருதப்படுகிறான்.

கல்வெட்டுகள்

தமிழ்நாடு, மாங்குளத்தில் இச்செழியன் பற்றிய இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்றில் இச்செழியனின் பணயனான கடலன் வழுதி என்பவன் கணியன் நந்தா என்ற சமண குருவுக்கு கொடுத்த குகைத்தானம் பற்றியுள்ளது.[1] மற்றொன்றில் இச்செழியனின் சகலனாகிய இளஞ்சடிகன் தந்தை சடிகன் என்பவன் இதே துறவிக்கு பள்ளி அமைத்து கொடுத்தது பற்றியுள்ளது.[2]

மூலம்

மேற்கோள்கள்

  1. கணி நந்தி ஆசிரியற்கு ஆங்கே ஏமம் ஈந் நெடுஞ்செழியன்
    பணவன் கடலன் வழுதி கொட்டுபித்த பள்ளி
  2. கணி நந்த ஆசிரியற்கு ஆன் ஏமம் ஈத்த நெடுஞ்செழியன்
    சகலன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய்யி பள்ளி

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya