இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமிகல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.[5][6] மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில்[4][7] உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணபடுகின்றன.[8] சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.[6]
மாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டில் இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[9] இங்குள்ள மலையில் காணப்படும் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9] இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[10] இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.[11]