நெமிலிச்சேரி (செங்கல்பட்டு மாவட்டம்)
நெமிலிச்சேரி (ஆங்கிலம்: Nemilicherry) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4] பத்து ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று நெமிலிச்சேரி பகுதியில் அமைந்துள்ளது.[5][6] கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 12°56′44″N 80°09′40″E / 12.9456°N 80.1610°E ஆகும். குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை நெமிலிச்சேரி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும். நெமிலிச்சேரியில், அகத்தீசுவரர் கோயில் ஒன்று அமையப் பெற்றுள்ளது.[7] நெமிலிச்சேரி பகுதியானது, பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் இ. கருணாநிதி ஆவார். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக த. ரா. பாலு, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia