நெல்சன் திலீப்குமார்
நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) திரைப்படங்களில் நெல்சன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் [2] பணியாற்றுகிறார் . இவரது படங்கள் கருப்பு நகைச்சுவை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களின் கூறுகளைக் கொண்டதாக அறியப்படுகின்றன.[3][4] நெல்சன் தான் முதல் இயக்கிய கோலமாவு கோகிலா படத்திற்காக நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றார்.[5] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரையில் 2018ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் இவர் பட்டியலிடப்பட்டார்.[6] தொடக்க வாழ்க்கைநெல்சன் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் காட்சி தொடர்பியல் (விசுவல் கம்யூனிகேஷன்) பட்டப்படிப்பு முடித்தவர். இவர் தனது திரை வாழ்க்கையை விஜய் தொலைக்காட்சியில் உதவிக் கதாசிரியராகத் தொடங்கினார்.[7] நெல்சனின் தந்தை 2018 நவம்பரில் காலமானார்.[8] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia