ந. குலசேகரபாண்டியன்

ந. குலசேகரபாண்டியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்அப்துல் லத்தீப்
பின்னவர்எச். அப்துல் மஜீத்
தொகுதிவாணியம்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-09-06)6 செப்டம்பர் 1946
ஆம்பூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

ந. குலசேகரபாண்டியன் (N. Kulasekara Pandian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர். ஆம்பூர், இந்து தொடக்கப் பள்ளி, திருப்பத்தூர் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை பயின்றுள்ளார். வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார், குலசேகரபாண்டியன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 164-165.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya