ந. சுந்தரம்பிள்ளை
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை (பிறப்பு: செப்டம்பர் 22, 1933) ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியில் வசிக்கிறார்.[1] வாழ்க்கைக் குறிப்புநடராசா தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டையில் அராலியூரில் பிறந்த சுந்தரம்பிள்ளை கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். கலைமாணிப் பட்டதாரியான இவர் பட்டப்பின்படிப்பாக 'கல்வி டிப்ளோமா' பட்டத்தினையும் பெற்றுள்ளார். நீண்ட காலமாக ஆசிரியராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்று முழுநேர வாசிப்பும், எழுத்தும் என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றார். இவரின் மனைவி "மங்கையர்க்கரசி". இவர் ஓர் ஆசிரியை. மகன் "மணிவண்ணன்". இவரும் பட்டதாரி ஆசிரியர். இருவரும் மரணித்து விட்டனர். இவரது முதலாவது சிறுகதை 1950ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் "கையொப்பம்" எனும் தலைப்பில் வெளியானது. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் இலங்கையில் வெளிவரும் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. சிறுகதைத் துறையினைவிட நாடகத்துறையிலே இவரின் ஈடுபாட்டினை அதிகமாக காணமுடிகின்றது. இவரது முதலாவது நாடகம் 31 டிசம்பர் 1954இல் 'இழந்த காதல்' எனும் தலைப்பில் 'அராலி சரசுவதி வித்தியாசாலையில்' அரங்கேற்றம் கண்டது. இந்த நாடகத்தை எழுதியவரும், கதாநாயகனும் இவரே. 1959ஆம் ஆண்டு ஆசிரியரானதும் அராலியில் மேடை நாடகத் தொழிற்பாடுகளில் முழு மூச்சில் ஈடுபடலானார். 1954க்கும் 1974க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் இருபது நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். இவரின் முதலாவது வானொலி நாடகம் இலங்கை வானொலியில் 'நானே ராஜா' என்ற தலைப்பில் 1980ஆம் ஆண்டில் ஒலிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றுவரை 385க்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார். எழுதிய சில நூல்கள்அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை இதுவரை 21 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். விபரம் வருமாறு:- வானொலி நாடக நூல்கள்
மேடை நாடக நூல்கள்
இலக்கிய நூல்கள்
விமர்சன நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு
நாவல்கள்
பெற்ற பரிசில்களும், விருதுகளும்
இவரின் இத்தகைய சேவைகளை கருத்திற் கொண்டு இலங்கை அரசு கலைஞர்களுக்கு வழங்கும் உயரிய விருதான 'கலாபூஷணம்' விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்* அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பரணிடப்பட்டது 2014-09-17 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia