பஜாலி மாவட்டம்
பஜாலி மாவட்டம் (Bajali district) அசாம் மாநிலத்தின் 34-வது மாவட்டமாக 12 சனவரி 2021 அன்று நிறுவப்பட்டது.[1] இது பார்பேட்டா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது.[2] [3] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பாத்சாலா நகரம் ஆகும். மக்கள் தொகை பரம்பல்பஜாலி மாவட்ட மொழிகள் (2011)[4] அசாமிய மொழி (74.48%) வங்காள மொழி (20.90%) போரோ மொழி (4.28%) பிற மொழிகள் (0.34%)
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஜாலி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,53,876 ஆகும். 418 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,192 (7.56%) மற்றும் 11,486 (4.52%) ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள் தொகையில் அசாமிய மொழியை 1,89,075 பேரும், வங்காள மொழியை 53,052 பேரும், போரோ மொழியை 10,877 பேரும் பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் 67.90%, இசுலாமியர் 31.91%, பிறர் 0.19% ஆகவுள்ளனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia