பணவாட்டம்
பொருளாதாரத்தில் பணவாட்டம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை நிலைகள் பொதுவாகக் குறைந்தே காணப்படும்[1] நிலை ஆகும். வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் பூஜ்யம் சதவீதத்தை விடக் குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது (மறுக்கின்ற பணவீக்கத்தின் விகிதம்). ஆகையால் நாணயத்தின் உண்மையான மதிப்பு அதிகரித்து மக்களை அதே அளவு பணத்தில் அதிகளவு பண்டங்களை வாங்க அனுமதிக்கிறது. இது பணவீக்க விகிதத்தின் வேகக் குறைவு முறை ஆகும் (பணவீக்கம் குறைந்தாலும் பணவாட்டம் உறுதியாகக் காணப்படும்)[2]. பணவீக்கம் நாணயத்தின் உண்மையான மதிப்பை காலப்போக்கில் குறைக்கிறது. ஆனால் பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கிறது. தேசிய மற்றும் பெரும் நிலப்பரப்புச் சார்ந்த பொருளாதாரத்தில் செலாவணியாகும் பணம் (மற்றும் பன்முறை சார்ந்த பிரிவின் கணக்குகள்). தற்போது பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக பணவாட்டம் என்பது பொருளாதாரத்தில் ஒரு பிரச்சனையாகும் எனக் கருதுகின்றனர். இதற்குக் காரணம் பணவாட்டத்துக்குரிய சுருளி (கிழே குறிப்பிடப்பட்டுள்ளது)[3] ஆகும். பணவாட்டம் தற்போதைய சரிவில் மற்றும் பெரும் அழுத்தத்தில் தொடர்பு கொண்டது ஆகும். இதனால் மக்கள் வங்கிகளில் பணம் வைப்பதைத் தவிர்த்தனர். மேலும் பங்குச் சந்தை பணமாக்கும் இயக்கமுறையினால் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் பன்முறை சார்ந்த செயல் திட்டத்தை பணவாட்டம் தடுக்கிறது. எனினும் வரலாற்றைச் சேர்ந்த வறுமையான பொருளாதார வளர்ச்சி காலங்களில் எல்லாம் கிளைக்கதைகளில் பணவாட்டம் பொருந்தி இருக்காது.[4] பழைமையான பதம்பணவாட்டம் என்பது அக்கால பொருளாதார வல்லுனர்களால் ஒதுக்கு நிதி மற்றும் கடன்களின் குறைவுகளைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சில பொருளாதார வல்லுனர்கள் மற்றும் ஆஸ்டிரியன்-பள்ளியைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்கள் இன்னும் இந்த சொல்லைப் பயன்படுத்துகின்றனர்[5]. இந்த இரண்டு பொருளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை ஆகும். ஏனெனில் ஒதுக்கு நிதியின் குறைவால் (நாணயத்தின் வேகம் மாறா நிலையில்) பொதுவாக விலையின் நிலையும் குறைந்தே காணப்படும். பணவாட்டத்தின் விளைவுகள்
IS/LM மாதிரி (அதாவது, ' வருமானம் மற்றும் ' சேமிப்பு சமநிலை/' பணமாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் மற்றும் ' ஒதுக்கு நிதி சமநிலை மாதிரி) பணவாட்டத்தின் காரணமாக இருக்கிறது. குறிப்பாக கோரிக்கையின் மொத்த அளவில் சரிவும் ஏற்படுகிறது. அதாவது மொத்த பொருளாதாரம் வாங்குவதற்கு உகந்த நிலையில் இருக்கும் போது பண்டங்களின் விலை நிலையிலும் சரிவு காணப்படுகிறது. பண்டங்களின் விலை சரிவதால் நுகர்வோர்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு மற்றும் உண்ணுவதற்கு மேலும் விலைகள் குறையும் வரை காத்திருக்கத் தூண்டுகிறது. இதுவே எல்லாவற்றையும் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை குறைத்து பணவாட்டத்துக்குரிய சுருளி எனப்படும் சூழ்நிலை பங்களிக்கிறது. அதனால் இது கொண்டிருக்கும் திறனை கட்டுப்படுத்தி, பாத்தியத்தையும் குறைத்து, மேலும் மொத்தம் கோரிக்கையையும் சுருக்கி விடுகிறது. இதுவே பணவாட்டத்துக்குரிய சுருளி ஆகும். சரியும் மொத்த கோரிக்கையின் பிரதிவினை ஊக்கமளிக்கும் வஸ்து ஆகும். மத்திய வங்கியிலிருந்து ஒதுக்கு நிதியின் விரிவாக்கத்தினாலோ அல்லது பிஸ்கல் அதிகாரத்தினாலோ, கோரிக்கை மற்றும் பாத்தியத்தின் அளவை கடன் வாங்குவதை அதிகப்படுத்துதல் ஆகிய இரண்டில் ஒன்று இதற்குக் காரணம் ஆகலாம். பணவீக்கத்துக்கு எதிர்மாறான விளைவுகள் உண்டு. இதனால் பின்னடைதலை தொடர்ந்து காணலாம்[சான்று தேவை]. உதாரணத்திற்கு 2008 ஆம் ஆண்டின் சரிவிற்கு முன் சில பொருட்களின் விலைகள் மிகவும் உயரத்தை எட்டிப்பிடித்தது. சமீபத்திய பொருளாதார நிலையில் பணவாட்டம் என்பது அபாயத்தை தொடர்ந்தவை ஆகும். அபாயம்-சரிகட்டுகளின் விவர தாக்கல்கள் சொத்துகள் மீது வீழ்ச்சி அடைகிறது. பலத்த பாதுகாப்பின் நடுவிலும் முதலீட்டாளர்களும் விலைக்கு வாங்குபவர்களும் நாணயத்தைச் செலவழிக்காமல் சேகரிக்கச் செய்வார்கள். இதுவே பங்குச் சந்தை பணமாக்கும் நிலையின் கோட்பாடு திட்டம் சார்ந்த நிலையை உருவாக்குகிறது. பொதுவாக மத்திய வங்கியினால், நாணயத்தின் மறுக்கின்ற வட்டியை கட்டணமாகச் செலுத்த முடியாது. கூடுதலாக பூஜ்யம் வட்டி விகிதத்தை கட்டணமாகச் செலுத்தினால் அதிக வட்டி விகிதத்தை விடக் குறைந்த இஸ்திமுலேடிவ் விளைவுகளே காணப்படும். மூடிய பொருளாதாரத்தில் இந்நிலை பூஜ்யம் வட்டி கட்டியதால் பூஜ்யம் திரும்புகையே எதிர்பார்க்கப்படும் அல்லது மறுக்கின்ற திரும்புகையையும் குறைந்த கால கட்டத்தில் காணப்படுகிறது. திறந்த பொருளாதாரத்தில் தொடர்ந்து செய் தொழிலை உருவாக்குகிறது. மற்றும் இதுவே ஏற்றுமதி அளவை அதிகரித்து இறக்குமதி பொருட்களின் மதிப்பைக் குறைக்கிறது. பன்முறை சார்ந்த கோட்பாடில் பணவாட்டம் என்பது நாணயத்தின் வேகத்தை அல்லது பரிவர்த்தனையின் எண்ணிக்கையை தொடர்ச்சியாகக் குறைப்பதில் தொடர்பு கொண்டவை ஆகும். இது ஒதுக்கு நிதியின் தத்ரூபமான மாற்றங்களின் பண்புடையது. அநேகமாய் குறைந்து வரும் பண்ட மாற்றம் விகிதத்தின் தொடர்பு கொண்டது அல்லது தங்கம் நியமத்தின் பின்பற்றது அல்லது வேறு வெளித்துறை பன்முறை சார்ந்த மூலக்கூறுகளின் தேவை கொண்டது. பணவாட்டம் பொதுவாக மறுக்கின்ற ஒரு நிலை ஆகும். ஏனெனில் இது கடன் பெறுபவர் மற்றும் உடைமையாளர்களின் ரொக்கம்மில்லாத கூடிய சொத்துக்களை மூல மாற்றம் செய்கிறது. அதுமட்டுமில்லாமல் சேமிப்பாளர்கள் மற்றும் உடைமையாளர்களின் ரொக்கமாகக் கூடிய சொத்துகள் மற்றும் நாணயங்களை பயனுள்ளதாகச் செய்கிறது. இந்த கண்ணோட்டத்தில் பணவாட்டம் என்பது பணவீக்கத்தின் எதிர் மாறானதாகும் (அல்லது வழமைக்கு மாறான கட்டுக்கு உட்படாத பணவாட்டமாக இருக்கும்). இதுவே நாணயத்தின் உடைமையாளர்களுக்கும் சேமிப்பாளர்களுக்கும் வரி கணக்காகவும் கடன் பெறுபவருக்கு சாதகமாகவும் அமையும். நவீன பொருளாதாரத்தில் (பொதுவாக மிக அதிக வட்டி விகிதத்தினால் கொண்டு வரப்படும்) உடைந்துபோன கோரிக்கையால் மற்றும் சரிவுடன் இணைப்புற்ற மற்றும் (மிகவும் அரிதாக) நீண்டகால பொருளாதார அழுத்தக்குறைவினாலும் பணவாட்டம் உண்டாகிறது. நவீன பொருளாதாரத்தில் கடனின் விதி முறைகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது மற்றும் கடன் நிதி அழிப்பது (மற்றவர்களின் உதவியால் கடன் பெறுவது) எல்லாவித முதலீட்டிலும் பொதுவாகக் காணப்படும். முதலீட்டையும் செலவுகளையும் பணவாட்டம் அதையரியப்படுத்துகிறது. ஏனெனில் லாபத்தின் எதிர்பார்ப்புகள் மறுக்கின்ற நிலையில் இருக்கும் பொழுது எதிர்கால லாபத்தில் அபாயம் இருப்பதற்கு காரணங்கள் இல்லை. மேலும் எதிர்கால அனுகூலத்தின் எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருக்கும். பொதுவாக இது மொத்த கோரிக்கைகள் உடைவதற்கு காரணமாகவோ அல்லது தொடர்பு கொண்டவையோ ஆகும். "பணவாட்டத்தின் கண்காணா அபாயங்கள்" இல்லாமல் ரொக்கத்தை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியதிருப்பதால் அதனை செலவழிக்கவோ முதலீடு செய்யவோ முடியாது. பணவாட்டம் எப்படியாகிலும் ஒதுக்கு நிதியின் அதிகரிப்பை உறுதியான ஜனத்தொகையின் வளர்ச்சிக்கு (மற்றும் பொதுவான பொருளாதாரம்) ஏற்றதாகக் கட்டுப்படுத்தாமல் விட்டால் சரி கட்ட முடியாத செலாவணியாகும் பணப் பொருளாதாரத்தின் இயற்கையான நிலை ஏற்படும். இந்நிலை ஏற்படும் போது கிடைக்கக்கூடிய சரி கட்ட முடியாத செலாவணியாகும் பணத்தின் தொகை வீதம் ஒரு நபருக்கு என்ற கணக்கில் குறையும். இதுவே நாணயத்தை செய்தலை அபூர்வமாக்குகிறது. மேலும் இதனால் செலாவணியாகும் பணத்தின் அங்கங்களை வாங்கும் திறன் அதிகரிக்கிறது. கடந்த 19வது நூற்றாண்டு இதற்கு ஒரு உதாரணம் அளிக்கிறது. இதில் விழாமல் நின்ற பணவாட்டதை சேர்த்து இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியும் காண முடியும். உற்பத்தி இயக்குத் திறனின் முன்னேற்றங்கள் பண்டங்களின் ஒட்டுமொத்த விலைகளை குறைத்து விட்டால் பணவாட்டம் நிகழக் கூடும். பண்டங்கள் மற்றும் சேவைகளின் பொருளாதார உற்பத்தியாளர்களுக்கு அதிகரிக்கும் லாப எல்லைக் கோடுகளால் ஊக்கமளித்து விட்டதால் உற்பத்தியில் முன்னேற்றங்கள் காணப்படுகிறது. இதனால் பொதுவாக உற்பத்தி இயக்குத் திறனிலும் முன்னேற்றங்கள் காணப்படுகிறது. சந்தையில் போட்டிகள் காணப்படுவதால் உற்பத்தியாளர்களை குறைந்தது இவ்வித விலை சேமிப்புகளின் மிகச் சிறிய பகுதியின் பயன்பாட்டை கூட அவர்களின் பண்டங்களின் கேட்கும் விலையாய் குறைத்து கொள்ள அடிக்கடி தூண்டுகிறது. இந்நிலையில் அவ்வித பண்டங்களுக்கு குறைவாகவே கட்டணம் அளிப்பார்கள். அதன் விளைவாக பணவாட்டம் உருவாகும். ஏனெனில் வாங்கும் சக்தி அதிகம் காணப்படும். ஒருவரின் நாணயத்தை வாங்கும் சக்தி அதிகரித்து கொண்டே போகும் பொழுது ரொக்கமில்லாமல் வைத்திருக்கும் சொத்துக்கள் அதாவது வீடு நிலம் மற்றும் மற்ற தனிப்பட்ட சொத்துகளாக இருக்கும் நிலையில் அது தாங்கொண்ணா நிலையை மட்டுமே கொடுக்கும். அது கடனையும் பெருக்குகிறது. அதாவது குறிப்பிட்ட பணவாட்ட காலத்திற்கு பிறகு ஒருவர் கடனின் சேவைகளில் செலுத்தும் கடனானது முதலில் கொடுக்கப்பட வேண்டிய தொகையைக் காட்டிலும் அதிகமான தொகையை செலுத்த நேரிடுவதை இது குறிக்கிறது. தொடர்ந்து பணவாட்டம் என்பது கடனின் வட்டி விகிதத்தின் கற்பனைத் தோற்றமுள்ள பெருக்காக நினைத்து கொள்ளலாம். இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவில் மிக பெரிய அழுத்தத்தின் பொழுது பணவாட்டம் வருடத்திற்கு 10% என்ற கணக்கில் நிலை கொண்டது. 0% கடன் கூட கவனத்தைக் கவரக்கூடியதாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை மறுபடியும் வருடத்திற்கு 10% அதிகமாகவே திருப்பி செலுத்த வேண்டியதாக இருந்தது. எனினும்
குறுங்கால வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்குக் குறைத்தாலும் அது ஒரு “உண்மையான்” வட்டி விகிதத்தை உண்டாக்குவதால் பண வழங்கலை கட்டுப்படுத்துவதற்கான வழக்கமான முறைகள் பயனற்றுப் போகலாம். இந்த வட்டி விகிதம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆகவே பண வழங்கலை அதிகரிக்க இருப்புகளை வாங்குவது அல்லது க்வாண்டிட்டேடிவ் ஈசிங்க் (பணம் அச்சடிப்பது) போன்ற மற்ற முறைமைகளை அமலுக்குக் கொண்டு வரவேண்டும். அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வின் தற்போதைய தலைவர் பென் பெர்னாங்க், 2002 ஆம் ஆண்டில் “….பணத்தை போதுமான அளவு உள் செலுத்துதலானது முடிவில் பணவாட்டத்தை முறியடிக்கும்” என்றார்.[6] கடினப் பணத்திற்காக வழக்காடுபவர்கள் ஒரு பொருளாதாரத்தில் “கட்டுப்பாடுகள்” இல்லாத நிலையில் பணவாட்டம் ஒரு வரவேற்கக்கூடிய விளைவாகும் என்றனர். ஏனென்றால் விலைகள் குறைவதனால் பொருளாதாரத்தின் அதிகமான முனைப்பு மற்ற பகுதிகளுக்கு செல்வதனால், பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த கொள்கை சில பொருளாதார நிபுணர்களால் குறை காணப்படுகிறது. எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லையென்றால் பணவீக்கமோ பணவாட்டமோ எதுவுமே குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தாதென்று அவர்கள் கூறுகின்றனர். பணவாட்டக் காலகட்டங்கள் பணம் கையில் இல்லாதவர்களை விட பணம் கையிலுள்ளவர்களுக்கு சாதகமாக உள்ளதால், 19ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டதுபோல இத்தகைய காலங்களில் மிகுந்த ஜனரஞ்சக உணர்ச்சிகள் பொங்குகின்றன. 19வது நூற்றாண்டின் கடைசியில் அமெரிக்காவின் ஜனரஞ்சக கொள்கையுள்ளவர்கள் கடின பணம் தரங்களை தகர்த்துவிட்டு அதிக பணவீக்கமுண்டாக்கக்கூடிய (பெருமளவில் கிடைக்கப்பெறுவதால்) வெள்ளி உலோகத்தை பணத்திற்கான தரக்கட்டுப்பாடாக வைக்க விரும்பினர். பணவாட்டச் சுழல்ஒரு பணவாட்டச் சுழல் என்பது விலைகள் குறைவதால் உற்பத்தி குறைந்து, அதனால் கூலியும் தேவையும் குறைவதால், மேலும் விலைகள் குறையும் ஒரு சூழ்நிலையாகும்.[7] பொதுவான விலை அளவுகளில் குறைவு ஏற்படுவது பணவாட்டம் எனப்படுவதால் ஒரு பணவாட்டச் சுழலில் விலைகள் குறைவதால் ஒரு நச்சுச் சுழல் உண்டாகிறது. இதில் பிரச்சனையே அதன் மூலக்காரணத்தை அதிகரிக்கிறது. த கிரேட் டிப்ரஷன் என்ற பெரும்பொருளாதார தொய்வானது சிலரால் பணவாட்டச் சுழல் என்று கருதப்பட்டது. பணவாட்டச் சுழல்கள் உண்மையில் நிகழுமா என்பது சர்ச்சைக்குரியதாகும். ஒரு பணவாட்டச் சுழல் என்பது 19ம் நூற்றாண்டின் பொதுவான மிதமிஞ்சிய கோளாற்றின் நவீன பருவினப் பொருளியல் வடிவமாகும். அதிகப்படியான கடன் ஒரு தொடர்கின்ற பணவாட்டத்தை உண்டாக்கக் கூடுமென்ற இர்விங்க் ஃபிஷருடைய கோட்பாடு மற்றொரு சம்பந்தப்பட்ட எண்ணமாகும். மிகுபணவீக்கத்திற்கான எதிர்வினைமிகுபணவீக்கம் ஒரு நாணயத்தை அழிக்கும்போது, மக்கள் தங்கள் சேமிப்புகளை மற்ற நாணயங்களில் மாற்றலாம். இது மற்ற நாணயங்களில் பணவாட்டத்தை உண்டாக்கலாம். மாறாக மிகுபணவீக்கத்தை உண்டாக்கும் கொள்கைகள் திடீரென்று மாற்றியமைக்கப்பட்டால், மக்கள் நாணயத்தின் மீது நம்பிக்கைப் பெறுவதால் ஒரு குறுகிய கால பணவாட்டம் உண்டாகும். பணவாட்டத்தின் காரணங்கள்வழக்கமான பொருளியலில் பணவாட்டம் என்பது பொருட்கள் மற்றும் பணத்திற்கான தேவை மற்றும் வழங்கு நிலைகளின் கூட்டினால் உண்டாகக்கூடும். அதிலும் குறிப்பாக பணம் வழங்குதல் குறைவதும் பொருட்களின் வழங்குதல் ஏறுவதனாலும் ஆகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பணவாட்டம் என்பது பொருட்களின் வழங்குதல் அதிகரித்து (அதிகரித்த உற்பத்தியால்) பண வழங்குதல் அதிகரிக்காததால் உண்டாகியிருக்கின்றன. அல்லது (த கிரேட் டிப்ரஷன் மற்றும் ஜப்பானில் 1990களின் ஆரம்ப காலங்களின் உண்டானது போல) பொருட்களுக்கான தேவை குறைந்து பண வழங்குதலும் குறைந்ததால் உண்டானது. த கிரேட் டிப்ரஷன் குறித்த பென் பெர்னாங்க் ஆய்வுகள் குறைந்த தேவையை சமாளிக்க, அப்போதைய ஃபெடரல் ரிசர்வ் பண வழங்கலைக் குறைத்ததால், பணவாட்டம் உண்டானதென்று சுட்டிக்காட்டுகின்றன. பணவாட்டத்தின் அடிப்படை வகைகள்தேவைப் பக்கத்தில் இரண்டு வகை, வழங்கல் பக்கத்தில் இரண்டு வகை என பணவாட்டத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
பணவழங்கல் பக்க பணவாட்டம்மானிடரிஸ்ட் (ஒரு பொருளாதார கொள்கை) கோணத்திலிருந்து பார்க்கும்போது பணவாட்டமானது பண வேகம் மற்றும்/ அல்லது ஒரு தனிநபரிடம் கிடைக்கப்பெறும் பண வழங்கலில் குறைவு ஏற்படுவதனால் வருகிறதென்று கருதப்படுகிறது.[சான்று தேவை] கடன் பணவாட்டம்நவீன கடன் - சார்ந்த பொருளாதாரங்களில், ஒரு பணவாட்டச் சுழலானது (மத்தியவங்கி) அதிகரித்த வட்டி விகிதத்தைப் புகுத்தி (அதாவது, பணவீக்கத்தைக் ‘கட்டுப்படுத்துவதற்காக’) ஒரு இருப்புக் குமிழை உண்டாக்கக் கூடும். அல்லது தான் தாங்க முடிவதற்கு கூடுதலான உற்பத்தி மட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்டுப்பாட்டு பொருளாதாரத்தை சீர்குலையவும் செய்யும். ஒரு கடன் - சார்ந்த பொருளாதாரத்தில், பண வழங்கல் குறைவது கடன் வழங்கலை குறைக்கிறது. இதனால் பண வழங்கல் மேலும் சரிகிறது, இதனால் பொருட்களுக்கான தேவை வெகுவாக சரிகிறது. தேவை சரிகிறது. தேவை சரிவதால், விலை சரிந்து மிதமிஞ்சிய வழங்கல் உருவாகிறது. விலையானது உற்பத்திக்குக் கீழே விழும்போது பணவாட்டச் சுழல் ஏற்படுகிறது. வணிகங்கள் தங்களுடைய விலைகளை எவ்வளவு தூரம் குறைத்தாலும் போதிய இலாபம் கிட்டாததால் முடங்கிவிடுகின்றன. வங்கிகளிடம் உள்ள இருப்புகள் (அடமானம்), கடனளித்த காலத்திலிருந்து வெகுவாக குறைந்துவிடுகின்றன. அந்த இருப்புகளை விற்றால், அது வழங்கலை மேலும் மிதமிஞ்சிய அளவுக்குக் கொண்டு சென்று, நிலைமையை மோசமாகத்தான் செய்கிறது. இந்த பணவாட்டச் சுழலை மெதுவாக அல்லது நிறுத்த, வங்கிகள் அவ்வப்போது திரும்ப செலுத்தாத கடன்களை வாங்குவதை நிறுத்திவிடுகின்றன (அண்மையில் ஜப்பானில் நடந்தது போல). இது அவ்வப்போது ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர்களிடத்தில் கடன் செலுத்த பணமில்லாததால் அவர்கள் கடனை கட்டுப்படுத்த வேண்டும். இது தேவையை மேலும் குறைத்து மற்றும் பல காரியங்களை உண்டாக்குகிறது. அதிகாரப்பூர்வமான பணத்தின் பற்றாக்குறையின் விளைவுநிலையற்ற நாணயமுள்ள பொருளாதாரங்களில், பண்ட மாற்றுமுறை மற்றும் ‘டாலர்மையமாக்குதல்’ போன்ற மற்ற நாணயங்களைப் பயன்படுத்துவது பொதுவாக செயல்படுத்தப்படுகிறது. இப்படிச் செய்வதால், ‘அதிகாரப்பூர்வமான’ பணம் பற்றாக்குறையாகும்போதும் (அல்லது மிகவும் அசாதாரணமாக நம்பகத்தன்மையை இழக்கும்போது) வர்த்தகம் தொடரக்கூடும் (உ.ம். மிகவும் அண்மையில் ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினாவில் நடந்தது போல).[சான்று தேவை] ஏனென்றால் அப்படிப்பட்ட பொருளாதாரங்களில் மத்திய அரசாங்கம் விரும்பியும் கூட உள்ளூர் பொருளாதாரத்தை சரிவர கட்டுப்படுத்த இயலாதிருப்பதால், இறக்குமதியாகும் பொருட்களுக்கு பணம் செலுத்துவதேயல்லாமல் அதிகாரப்பூர்வமான நாணயத்தைப் பெற தனிநபர்களுக்கு எந்தவித அவசியமும் இருப்பதில்லை. உண்மையில் பார்த்தால் அப்படிப்பட்ட பொருளாதாரங்களில் பண்ட மாற்று முறையானது உள்ளூர் உற்பத்தியின் உள்ளூர் நுகர்வை ஊக்குவிப்பதால் ஒரு மாதிரியான காப்புவரியாக திகழ்கிறது.[சான்று தேவை] இது சுரங்க வேலை மற்றும் புத்தாய்வு தேடல் போன்ற வேலைகளுக்கும் தூண்டுகோலாக இருக்கிறது. ஏனென்றால் இப்படிப்பட்ட பொருளாதார சூழலில் நிலத்திலிருந்து பணத்தை எடுப்பதே பணம் ஈட்டுவதற்கான எளிதான வழியாகும். சிறப்பு முயற்சிகள் (?)மத்திய வங்கியானது பெயரளவு வங்கி விகிதங்களை பூஜ்ஜியம் வரைக்கும் குறைக்கும்போது, தேவையை ஊக்குவிப்பதற்காக அதனால் வட்டி விகிதங்களை மேலும் குறைக்க இயலாது. இதுவே பரவலாக நீர்மை செயலறு நிலை என்றழைக்கப்படுகிறது. பணவாட்டம் ஓங்கும்போது, பண வழங்கலை (செயற்கையாக) அதிகரிப்பதற்காக பணத்தை பூஜ்ஜியம் (எதிர்மறையான பணவீக்க விகிதத்தால் இது இன்னமும் மிகவும் உயர்ந்த உண்மை வட்டி விகிதமாக இருக்கலாம்) என்ற பெயரளவு வட்டி விகிதத்தில் ‘கடனளிக்க’ “சிறப்பு முயற்சிகள்” தேவைப்படுகின்றன. கடன் பணவாட்டத்தின் உதாரணங்கள்த கிரேட் டிப்ரஷனின் (பெரும் பொருளாதாரத் தொய்வு) போது இந்த சுழற்சி பெருமளவில் காணப்பட்டது. சர்வதேச வாணிபம் வெகுவாகக் குறைந்தது. இதனால் பொருட்களுக்கான தேவை மிகவும் குறைந்து ஆற்றல் வெகுவாக பயன்படாது போனது. இதனால் சரமாறியாக வங்கிகள் முடங்கிப் போயின. இதே போன்றதோர் சூழ்நிலை 1990களின் ஆரம்ப காலங்களில் ஜப்பானில் நடந்தது. இது பங்கு மற்றும் வீடுமனை விற்பனை தொழில் சீர்குலைந்ததால் ஆரம்பித்தது. ஜப்பான் அரசாங்கமானது பெரும்பாலான வங்கிகளின் சீர்குலைவை தடுத்து மிகவும் மோசமாக நலிந்திருந்த பலவற்றை நேரடியாக கையெடுத்து சூழ்நிலையைக் காப்பாற்றியது. இந்த சம்பவங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளானவைகளாகும். பின்-2000 நிதிநெருக்கடியின் போது தீவிர பணவாட்டத்தின் அபாயங்கள்பின்-2000 நிதிநெருக்கடி காரணமாகவே அமெரிக்கா தீவிர பணவாட்டத்தின் இடர்பாட்டுக்கு ஆளானது என பொருளாதார நிபுணர்கள் வாதிடுகிறார்கள், மேலும் ஆகையால் ஃபெடரல் ரிசர்வ் மைய வங்கி 2001 இல் இருந்து வட்டி விகிதங்களை "இணங்கிப்போகும்" நிலையில் வைத்திருக்க உரிமை கொண்டிருந்தது. நடுநிலையாக்குப் பணவாட்டம்
1930கள் வரை பணவாட்டம் அதுவாகவே சரியாகிவிடும் எனப் பொதுவாக பொருளாதார நிபுணர்கள் கருதிவந்தனர். விலைகள் குறையும் போது தேவை இயல்பாகவே அதிகரிக்கும், மேலும் பொருளாதார அமைப்பு வெளிப்புறக் குறுக்கீடுகள் ஏதுமின்றி தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். இந்தப் பார்வை 1930களில் பெரும் இறக்கத்தின் போது சவாலாக இருந்தது. கெய்னீசியன் பொருளாதார நிபுணர்கள், பொருளாதார அமைப்பு பணவாட்டத்தின் சார்பாக சுய-சரிபடுத்தலைச் செய்துகொள்ளாது, மேலும் அரசாங்கங்களும் மைய வங்கிகளும் வரியை நீக்குதல் அல்லது அரசாங்கச் செலவழிப்பை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாக தேவையை அதிகரிப்பதற்கு இயக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாதிடுகிறார்கள். மைய வங்கியில் இருந்து கையிருப்புத் தேவைகள் அதிகமாக இருக்கிறது, மேலும் மைய வங்கி பின்னர் எளிமையாக ரிசர்வ் தேவைகளைக் குறைப்பதன் மூலமாக மற்றும் வரவின் வலிமை இழப்பின் (வரவு என்பது பணத்தின் வடிவம்) காரணமாக தனியார் துறைகளில் பணம் வழங்கலை ஈடு செய்வதற்கான "திறந்த சந்தைச் செயல்பாடுகள் (எ.கா., கருவூலப் பத்திரங்களை பணத்துக்கு வாங்குதல்) பணம் வழங்கலை ஆற்றல்மிக்க விதத்தில் அதிகரிக்கலாம். மானிடரிஸ்டுகளின் உத்திகளின் அதிகரிப்புடன், பணவாட்டச் சண்டையில் கவனம் செலுத்துவது, வட்டி விகிதங்களை குறைத்தல் (அதாவது பணத்தின் "செலவைக்" குறைத்தல்) மூலமாக தேவையை விரிவாக்குவதில் இருக்கிறது. இந்தப் பார்வை முறையே 1990களின் முற்பகுதி மற்றும் 2000-2002 இல் பங்குச் சந்தை அதிர்வுக்குப் பிறகு செயல்லாற்றுவதற்கான தேவைக்கு ஜப்பான் மற்றும் அமெரிக்கா இரண்டிலும் இணக்கமாக கொள்கைகளின் தோல்வியின் வெளிச்சத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. பொருளாதார நிபுணர்கள் தற்போது சொத்து விலைகள் மீது பணம் சார்ந்த கொள்கைகளின் தாக்கத்தைப் (பணவீக்கம்) பற்றி கவலை கொள்கிறார்கள். உறுதி வாய்ந்த குறைந்த உண்மையான விகிதங்கள் ஆனது உயர் சொத்து விலைகள் மற்றும் அதிகப்படியான கடன் திரட்டுதல் ஆகியவற்றுக்கு நேரடிக் காரணமாகலாம். ஆகையால் விகிதங்கள் குறைதல் தற்காலிகத் தணிக்கும் ஆற்றல்களாக மட்டுமே நிரூபிக்கப்படும் முடிவாக விளைகிற எதிர்காலக் கடன் பணவாட்ட நெருக்கடியின் கடுமையாக்கத்துக்கு வழிவகுக்கும். பணவாட்டத்தின் எடுத்துக்காட்டுகள்யுனைட்டட் கிங்டம்முதல் உலகப் போரின் போது பிரித்தானிய பவுண்ட் ஸ்டெர்லிங் தங்கத் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கான ஊக்கம் முதல் உலகப்போருக்கு நிதியளித்ததாகும்; இதன் விளைவுகளின் ஒன்று பணவாட்டம் ஆகும், மேலும் பவுண்டுக்கான சர்வதேச பரிமாற்ற விகிதங்களில் ஒத்திசைவான இழப்புடன் சேர்ந்து, தங்கத்தின் விலை அதிகரித்தது. போருக்குப் பிறகு பவுண்ட் தங்கத் தரவரிசைக்குத் திரும்பிய போது, இது முன்-போர் தங்க விலை அடிப்படையில் செய்யப்பட்டது. எனினும், அது தங்கத்தின் சமமான விலையைக் காட்டிலும் அதிகமாக இருந்த போதும், பவுண்டின் உயர் இலக்கு மதிப்புடன் மறு ஒழுங்கு செய்வதற்கு தேவையான விலைகள் வீழ்ச்சியடைந்தது. UK தோராயமாக 1921 இல் 10%, 1922 இல் 14% மற்றும் 1930களின் ஆரம்பத்தில் 3 இலிருந்து 5% வரை பணவாட்டத்தைச் சந்தித்தது.[8] அமெரிக்காவில் பணவாட்டம்பெருமப் பணவாட்டங்கள்அமெரிக்காவில் பணவாட்டத்தில் மூன்று குறிப்பிடத்தக்க காலங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது 1836 இல் ஏற்பட்ட தேக்கநிலை ஆகும், இது அமெரிக்காவின் கரன்சி மதிப்பு சுமார் 30%க்குச் சுருங்கிய போது ஏற்பட்டது, அந்தச் சுருக்கம் பெரும் இறக்கத்துடன் மட்டுமே பொருந்துவதாக இருந்தது. இந்த "பணவாட்டம்", விலை குறைதல் மற்றும் பணத்தின் தேவைப்படும் அளவில் குறைதல் ஆகிய இரண்டு வரையறைகளுக்கும் பொருந்துவதாக இருந்தது. இரண்டாவது குடியுரிமைப் போருக்குப் பிறகு ஏற்பட்டது, சில நேரங்களில் அது பெரும் பணவாட்டம் என்று அழைக்கப்பட்டது. இது தங்கத் தரநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியத்தைத் தூண்டியது. குடியுரிமைப் போரின் போது அச்சுப் பணம் அச்சிடுதல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது 1930-1933 க்கு இடையில் ஏற்பட்டது, இது பணவாட்ட விகிதம் தோராயமாக ஆண்டுக்கு 10 சதவீதமாக இருந்த போது ஏற்பட்டது. அமெரிக்காவின் சில பகுதிகள் பெரும் இறக்கத்தினால் சரிவைச் சந்தித்தன. அங்கு வங்கிகள் செயலிழந்தன மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் 25% ஆக உச்சத்தில் இருந்தது. 1836 இல் ஏற்பட்டதைப் போல பெரும் இறக்கத்தின் பணவாட்டம், திடீர் எழுச்சி அல்லது வெளியீட்டின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆரம்பமாகவில்லை. அது வரவின் (பணம்) மிகப்பெரிய சுருக்கம் காரணமாக ஏற்பட்டது, திவால் நிலைகள் பணத்தின் கட்டு மீறிய தேவைச் சூழ்நிலைகளை உருவாக்கின, மேலும் ஃபெடரல் ரிசர்வ் அந்த தேவைக்கு போதிய அளவில் ஒத்திசையவில்லை. அதனால் வங்கிகள் ஒவ்வொன்றாகக் கவிழ்ந்தன (ஏனெனில் அவற்றால் பணத்துக்கான திடீர் தேவையைச் சமாளிக்க இயலவில்லை— பார்க்க: பகுதியளவு-ரிசர்வ் வங்கியாக்கம்). ஃபிஷ்ஷர் சமன்பாட்டின் (மேலே காண்க) கருத்து நிலையில் இருந்து, பணம் வழங்கல் (வரவு) மற்றும் பணத்தின் திசைவேகம் ஆகிய இரண்டிலும் உடன் நிகழ் இழப்பு ஏற்பட்டது. அது ஃபெடரல் ரிசர்வால் நெருக்கப்பட்ட பணம் வழங்கலில் அதிகரித்த போதும் அளவிடற்கரிய விலை பணவாட்டத்தைக் கைகொண்டிருந்தது. சிறுமப் பணவாட்டங்கள்அமெரிக்காவின் வரலாறு முழுவதும், பண வீக்கம் குறைந்த காலகட்டத்திற்காக (எதிர்மறைப் பணவீக்கம், பணவாட்டமாக இருக்கிறது) பூஜ்ஜியத்தை மற்றும் தரை தொடும் அணுகுமுறையுடன் இருக்கிறது. இது இரண்டாம் உலகப்போருக்கு முன்பு 19 ஆம் நூற்றாண்டில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் மிகவும் பொதுவானதாக இருந்தது. சில பொருளாதார நிபுணர்கள் அமெரிக்கா கடன்-பணவாட்டக் கோட்பாட்டுடன் ஒப்பிடுகையில், 2007-2010 ஆம் ஆண்டுகளின் நிதி நெருக்கடியின் ஒரு பகுதியாக தற்போது பணவாட்டத்தைச் சந்திக்கலாம் என நம்புகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு நுகர்வோர் விலைகள் ஆகஸ்ட் 2009 இறுதி வரை ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்தது. இது பெருமளவு ஆற்றல் விலைகள் விரைவாக நலிவுற்றதன் காரணமாக ஏற்பட்டது.[சான்று தேவை] நுகர்வோர் விலைகள் அக்டோபர் 2008 இல் 1 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தன. இது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1947 இல் இருந்து மிகவும் அதிகமாக ஒரு மாத வீழ்ச்சியாக இருந்தது. அந்தப் பதிவு நவம்பர் 2008 இல் 1.7% வீழ்ச்சியடைந்ததுடன் முறியடிக்கப்பட்டது. அதற்கு பிரதிவினையாக, ஃபெடரல் ரிசர்வ் டிசம்பர் 16, 2008 இல் இருந்து தொடர்ந்து வட்டி விகிதங்களை நிறுத்தி கிட்டத்தட்ட பூஜ்ஜிய எல்லைக்குக் கொண்டுவர முடிவு செய்தது.[9] 2008 இன் பிற்பகுதி மற்றும் 2009 இன் முற்பகுதியில், சில பொருளாதார நிபுணர்கள் அமெரிக்கா பணவாட்டச் சுருளில் நுழையக்கூடும் என பயந்தனர்.[சான்று தேவை] பொருளாதார நிபுணர் நவ்ரியல் ரூபினி, அமெரிக்கா பணவாட்டத் தேக்கத்தில் நுழையலாம் என முன்னுரைத்திருந்தார், மேலும் அவர் அதை விவரிப்பதற்கு "ஸ்டேக்-டிஃப்லேசன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார்.[10] இது ஸ்டேக்ஃபிலேசனுக்கு எதிரானதாகும், அது 2008 இன் வசந்த காலம் மற்றும் கோடை காலங்களில் முக்கிய பயமாக இருந்தது. அமெரிக்கா பின்னர் அளவிடக் கூடிய பணவாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஆரம்பித்தது. முதலில் அளவிடப்பட்ட பணவாட்டம் மார்ச்சில் -0.38% த்தில் இருந்து நிதானமாகக் குறைந்து ஜூலையில் பணவாட்ட விகிதம் 2.10% ஆக இருந்தது. உழைப்பூதிய முன்னணியில் அக்டோபர் 2009 இல், கொலரோடோ மாநிலம் அதன் குறைந்தபட்ச உழைப்பூதியத்தை அறிவித்தது. அது பணவீக்கத்தை உள்ளடக்கி குறைத்து அமைக்கப்பட்டிருந்தது. 1938 இல் இருந்து முதல் முறையாக அந்த மாநிலத்தின் குறைந்தபட்ச உழைப்பூதியம் குறைக்கப்பட்டது.[11] ஹாங்காங்கில் பணவாட்டம்1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆசிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ஹாங்காங் பணவாட்டத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரை முடியவில்லை [3] பரணிடப்பட்டது 2005-03-08 at the வந்தவழி இயந்திரம். பல கிழக்கு ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் இந்த நெருக்கடியைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன. எனினும் ஹாங்காங் டாலர், US டாலருக்கு ஈடாக இருந்தது. நுகர்வோர் விலைகளின் பணவாட்டம் மூலமாக இந்த இடைவெளி நிரப்பப்பட்டது. பெருநிலச் சீனாவில் இருந்து மலிவான சரக்குகள் மற்றும் நலிவுற்ற நுகர்வோர் தன்னம்பிக்கை காரணமாக இந்த நிலைமை மோசமடைந்தது. கின்னஸ் உலக சாதனைகளைப் பொறுத்தவரை 2003 இன் குறைந்த பணவீக்கத்துடன் ஹாங்காங் பொருளாதாரம் இருந்தது. [4] ஜப்பானில் பணவாட்டம்1990களின் முற்பகுதியில் இங்கு பணவாட்டம் தொடங்கியது. வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமாக இதைத் தவிர்ப்பதற்கு (அவர்களது 'அளவுச்சார்ந்த மாற்றத்' திட்டத்தின் ஒரு பகுதியாக) பேங்க் ஆப் ஜப்பானும் அரசாங்கமும் முயற்சித்தன. ஆனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக இது வெற்றியடையவில்லை. ஜூலை 2006 இல் பூஜ்ஜிய விகிதத் திட்டம் நிறைவடைந்தது. ஜப்பானில் பணவாட்டத்திற்கான உள்பரவிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவை:
நவம்பர் 2009 இல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலைப் பொறுத்தவரை ஜப்பான் பணவாட்டத்தை மீண்டும் சந்தித்தது. புளூம்பெர்க் எல்.பி. தெரிவிக்கையில் அக்டோபர் 2009 இல் நுகர்வோர் விலைகளானது சுமார் 2.2% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.[12] அயர்லாந்தில் பணவாட்டம்பிப்ரவரி 2009 இல் அயர்லாந்தின் முக்கிய புள்ளியியல் அலுவலகம் ஜனவரி 2009 இன் போது அறிவிக்கையில் 2008 ஆம் ஆண்டின் அதே பருவத்தில் இருந்து 0.1% மூலமாக விலைகள் வீழ்ச்சியடைந்ததுடன் நாடு பணவாட்டத்தை எதிர்கொள்ளும் என அறிவித்தது. 1960 இல் இருந்து ஐரிஷ் பொருளாதாரத்தை பணவாட்டம் தாக்கியது இதுவே முதல் தடவையாகும். மாதத்தில் 1.7% வரை அனைத்து நுகர்வோர் விலைகளும் குறைந்துள்ளன.[13] அயர்லாந்தின் நிதி அமைச்சரான பிரைன் லெனிஹான், RTÉ வானொலியுடன் ஒரு நேர்காணலில் பணவாட்டத்தைக் குறிப்பிட்டார். RTÉயின் கணக்கீடைப் பொறுத்தவரை "நிதி அமைச்சர் பிரைன் லெனிஹன் கூறியதாவது, குழந்தைகள் ஆதாயம், அரசுத்துறை ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தொழிலரின் ஊதியங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, வரவு செலவுத்திட்ட குறைப்பின் போதே கணக்கீடில் பணவாட்டம் கண்டிப்பாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மிஸ்டர் லெனிஹன் கூறியதில், மாதத்திற்கு மாதம், இந்த ஆண்டின் வாழ்க்கை செலவில் 6.6% நலிவுற்றுள்ளது" என்றார். இந்த நேர்காணலை கவனித்துப் பார்த்ததில், நேர்காணலில் அமைச்சர் மூலமாக பணவாட்டமானது எதிர்மறையாக பகுத்தறியப்பட்டு மேற்கோளிடப்படவில்லை. குறிப்பிட்ட ஆதாயங்களைக் குறைப்பதற்கான சர்ச்சைகளுக்கு, பணவாட்டம் தரவின் வகையாக உதவுகிறது என அமைச்சர் குறிப்பிட்டார். பணவாட்டத்தின் காரணமாக பொருளாதாரக் கேடு ஏற்பட்டதை இந்த அரசாங்க உறுப்பினர் மூலமாக எடுத்துக்காட்டப்படவில்லை அல்லது குறிப்பிடப்படவில்லை. ஒரு மூத்த நிதி அமைச்சர் மூலமாக இந்த பணவாட்டம் எவ்வாறு தவிர்க்கப்பட வேண்டும் அல்லது இதைக் கண்டிப்பாகத் தவிர்க்கலாமா என்று இந்த நவீன உலகத்தில் கலந்துரைக்கப்பட்டது பணவாட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக உள்ளது.[14] மேலும் காண்ககுறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia