பதேகாட் சாகிப்
பதேகர் சாகிப் (Fatehgarh Sahib), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதேகர் சாகிப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட சீக்கியர்களின் குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன் பதேகர் சாகிப் நினைவாக இந்நகரத்திற்கு பெயர் வைக்கப்பட்டது இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு தென்கிழக்கே 41.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17 வார்டுகளும், 11,899 குடியிருப்புகளும் கொண்ட பதேகர் சாகிப் நகரத்தின் மக்கள் தொகை 58,097 ஆகும். அதில் 30,642 ஆண்கள் மற்றும் 27,455 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.58 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 896 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.49 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 22.03 % மற்றும் 0% வீதம் உள்ளனர். .[1] மேற்கோள்கள்ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia