பறக்கும் விலங்குகள்![]() பறக்கும் விலங்குகள் வளிமண்டலத்தில் பறக்கும் அல்லது வழுக்கும் வல்லமை கொண்ட உயிரினங்களைக் குறிக்கும். பறக்கும் இயல்பு முதன் முதலில் முள்ளந்தண்டுடைய விலங்கான தெரோசோர் அல்லது இறக்கைப் பல்லி என்னும் ஊர்வன குடும்ப விலங்கில் கூர்ப்படைந்தது எனக் கருதப்படுகிறது. பூச்சியினம், பறவையினம், முலையூட்டிகளில் வௌவால் என்பன பறக்கும் திறமை உடையன. இவற்றில் இருந்து வேறுபாடாக, வனாந்தரத்தில் வசிக்கும் சில விலங்கினங்கள் வழுக்கும் இயல்பு கொண்டுள்ளன, இது அவை மரம் விட்டு மரம் தாவவும் உயர்ந்த இடத்தில் இருந்து புவியீர்ப்புக்கு எதிராகப் பாயவும் உதவியாக உள்ளது. வளிமண்டலத்தில் அசையும் விதங்கள்விலங்கினங்கள் வளிமண்டலத்தில் அசையும் விதங்களைப் பற்றிய அறிவு அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது. பொதுவாக பறத்தல் என்றால் இறக்கைகள் தேவை. வழுக்கும் தன்மைக்கு இவை தேவையில்லை. வளிமண்டலத்தில் அசையும் விதம் இருவகைப்படுத்தப்பட்டுள்ளது - வலுவான வளிமண்டல அசைவு, வலுவற்ற வளிமண்டல அசைவு. வலுவான அசைவில், விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்தி காற்றியக்க விசையை உண்டாக்குகின்றன. வலுவற்ற அசைவில், காற்றால் அல்லது காற்றில் கீழே விழுவதால் உடலில் பிரயோகிக்கப்படும் காற்றியக்க விசையைப் பயன்படுத்தி அசைகின்றன. வலுவற்ற அசைவுஇம்முறையானது விலங்கொன்று உயர்ந்த இடத்தில் இருந்து அசைவதற்கு தேவைப்படுகின்றது.
வலுவான அசைவுவலுவான அசைவு நான்கு தடவைகள் பரிணாம வளர்சியுற்றுள்ளன (தெரோசோர்கள், பூச்சிகள், பறவைகள், வௌவால் இனங்கள்). இங்கு விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்திப் பறக்கின்றன.
ஒரு விலங்கினம் மேற்கூறிய முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் அசைகின்றது. மிதக்கும் அல்லது வழுக்கும் செயற்பாடானது மரத்துக்கு மரம் தாவுவதற்கு மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விலங்குகள் குறைந்த சக்தி தரும் உணவுகளையே (இலைகள் போன்றன) உண்கின்றன என்று ஒரு கருதுகோள் உண்டு, அதேநேரத்தில் கூடிய சக்தி தரும் பழங்கள், பூச்சிகள் போன்றவற்றை வலுவான அசைவு முறையைப் பயன்படுத்தும் பறக்கும் விலங்குகள் உண்கின்றன. வழுக்கும் விலங்குகள் கூடுதலாக தென்கிழக்கு ஆசியாவில் மற்றும் ஆபிரிக்காவில் காணப்படுகின்றன. முள்ளந்தண்டிலி பறக்கும் மற்றும் வழுக்கும் விலங்குகள்கணுக்காலிகள், மெல்லுடலிகள் முள்ளந்தண்டிலிகளில் பறக்கும் தன்மை கொண்டனவையாகும். கணுக்காலிகள்![]() கணுக்காலிகளில் பூச்சிகள் பறக்கும் மற்றும் வழுக்கும் முறை கொண்டு அசைகின்றன. பறக்கும் முறையுடைய பூச்சிகளில் இறக்கை காணப்படுகின்றது. சில உதாரணங்கள்: தும்பி, வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி. இவற்றின் பறக்கும் முறைகள் அறிவியலில் ஆராயப்பட்டவண்ணம் உள்ளன. சில பூச்சியினங்கள் இறக்கைகள் ஏதுமற்ற நிலையிலும் வளிமண்டலத்தில் அசையும் தன்மை உடையன. இவை மரத்துக்கு மரம் தாவுவதற்கு வழுக்கும் முறையைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு உதாரணங்களாக:
மெல்லுடலிகள்மெல்லுடலிகளில் பறக்கும் திறனைக் கொண்ட உயிரினமொன்று பறக்கும் கணவாய் ஆகும். இவை கடல் மேற்பரப்பில் வழுக்கும் முறையைப் பயன்படுத்தி அசைகின்றன. தம்மைக் கொல்லவரும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க இச்செயன்முறை உதவுகிறது. ஒம்மாசுட்ரேபிடே (Ommastrephidae) எனும் குடும்பத்தைசேர்ந்த சில கணவாய் வகைகள் இத்தகைய ஆற்றல் உடையவை. யப்பானிய அல்லது பசுபிக் பறக்கும் கணவாய் இனங்கள் தாம் உள்ளெடுத்த நீரைப் பீச்சியடிப்பதன் மூலம் கடல்நீர் மேற்பரப்பில் இருந்து மேலெழும்புகின்றன. பின்னர் தமது துடுப்புகளை விரித்து இறக்கை போன்றதொரு அமைப்பை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் பறக்கும்/வழுக்கும் போது தமது சமநிலையைப் பேணுகின்றன. சில வகை யப்பானிய பறக்கும் கணவாய்கள் தொடர்ச்சியாக நீரைப் பீச்சியடித்துப் பறக்கின்றன எனப்படுகின்றது. இந்த முறை மூலம் இவை செக்கனுக்கு 11.2 மீட்டர்கள் வேகத்தில் பறக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் பறக்க அல்லது வழுக்க வல்ல தூரம் 30 – 50 மீட்டர்கள் மட்டுமே. சில பறவைகள் இரையைப் பிடிப்பதற்கு நீர்நிலையின் கீழ் செல்கின்றன. இக் கணவாய்கள் தாம் இரையாகாமல் தவிர்ப்பதற்கு நீர்நிலையின் மேலே எழும்புகின்றன. முள்ளந்தண்டுள்ள பறக்கும் விலங்குகள்பறக்கும் மீன்கள்![]() எக்சொசிடிடே (Exocoetidae) குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பது பறக்கும் மீன் வகை இனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சிறியது தொடக்கம் நடுத்தர அளவு வரையான சமுத்திரவாழ் மீன்கள் ஆகும். பெரிய பறக்கும் மீன் 45 சென்டிமீட்டர் (18 அங்குலம்) நீளமானவை. ஆனால் பெரும்பாலான இனங்கள் 30 செ.மீ. (12 அங்குலம்) நீளத்துக்கும் குறைவாகவே உள்ளன. அவற்றை இரண்டு இறக்கை உடைய வகைகள் மற்றும் நான்கு இறக்கை வகைகள் எனப் பிரிக்கலாம். மற்றைய மீன்களை விட இவற்றின் மார்புத்துடுப்பு (pectoral fin) இயல்பான அளவுக்கும் அதிகமாகக் காணப்படும். பறக்கும் மீன்கள் அவற்றின் மார்புத்துடுப்பைப் பயன்படுத்தி நீருக்கு மேலே சுமார் நூறு மீட்டர் வரையிலும் வழுக்குகின்றன. இச்செயற்பாடு பெரும்பாலும் அவற்றை இரையாக்க முயற்சிக்கும் உயிரினங்களிடம் இருந்து தப்புவதற்கே நிகழ்கின்றது என நம்பப்படுகிறது. வழுக்குமுறை: பறப்பதற்கு முன்னர், நீருக்கடியில் ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) வேகத்தில் நீர்மேற்பரப்பை நோக்கி சாய்வாக (விமானம் பறப்பதற்கு எழும்புவதைப் போன்று) நீந்துகின்றன.[2] இதன் பொழுது இவற்றின் வால்துடுப்பு விரைவாக அடித்துக் கொள்கின்றது. நீரில் இருந்து உந்தி நீர்மேற்பரப்பை அடைந்த மீன்கள் மார்புத் துடுப்பைப் பயன்படுத்தி நீர்மட்டத்துக்கு சுமார் 1.2 மீட்டர்களுக்கு மேலே பறக்கின்றன அல்லது வழுக்குகின்றன. இவை தொடர்ச்சியாகப் பறப்பதற்கு தமது வால் துடுப்பை நீரில் அடித்துக்கொள்கின்றன. ![]() பறக்கும் தவளைகள்இராக்கொபெரிடே குடும்பத்தைச் சேர்ந்த பறக்கும் தவளைகள் வழுக்குமுறையைப் பயன்படுத்தி 45 பாகைக்கும் குறைவான கோணத்தில் மேலிருந்து கீழே இறங்குகின்றன. மற்றைய தவளைகள் வான்குடை முறையைப் பயன்படுத்தி கீழிறங்கவல்லன. இவை விரல்களின் இடையே மற்றும் காற்பகுதிகளில் காணப்படும் சவ்வுகளைப் பயன்படுத்தி வழுக்குகின்றன. இவைகளில் ஒன்று வாலசின் பறக்கும் தவளை வகைகள் ஆகும். இவை இந்தோனேசிய மற்றும் மலேசிய பகுதிகளில் வசிக்கின்றன. ஊர்வன
![]()
முலையூட்டிகள்
![]() அழிந்துபோன பறக்கும் விலங்குகள்ஊர்வன
காணொளி இணைப்புகள்உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia