பவளத்தாம்பாளையம்
பவளத்தாம்பாளையம் (ஆங்கிலம்: Pavalathampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 246 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பவளத்தாம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′06″N 77°39′39″E / 11.301700°N 77.660750°E (அதாவது, 11°18'06.1"N, 77°39'38.7"E) ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை பவளத்தாம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். பவளத்தாம்பாளையம் பகுதியில் எ. இ. டி. (A. E. T.) மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியிலுள்ள மைதானத்தில் 2020 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.[2] பவளத்தாம்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[3] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia