பாக்கித்தான் மக்கள் கட்சி
பாக்கித்தான் மக்கள் கட்சி (Pakistan Peoples Party, உருது: پاکستان پیپلز پارٹی), சுருக்கமாக பி॰பி॰பி॰, பாக்கித்தானின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். சோசலிச மக்களாட்சி இதன் கொள்கையாகும். நவம்பர் 30, 1967 அன்று சுல்பிக்கார் அலி பூட்டோவின் தலைமையில் இக்கட்சித் தொடங்கப்பட்டது.[1] இக்கட்சியின் தலைவர்களாக பூட்டோ குடும்பத்தினரே (அவரது மருமகன் சர்தாரி குடும்பத்தினர்) இருந்து வந்துள்ளனர். பூட்டோ குடும்பத்தினரின் சிந்து மாகாணத்தில் வலுவான மக்களாதரவைக் கொண்டுள்ள இந்த கட்சி பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்தூன், கில்கித் ஆகிய பகுதிகளிலும் வலுவாக உள்ளது. தற்போது இந்தக் கட்சி பாக்கித்தானின் நடுவண் அரசில் ஆளும் கட்சியாக உள்ளது. தற்போதைய கட்சித்தலைவராக பாக்கித்தானிய சனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரியும் அவரது மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியும் இணையாக உள்ளனர்.[2] இவற்றையும் காண்கவெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia