பான சங்கராந்தி

பான சங்கராந்தி
மகா விசுப சங்கராந்தி
பான சங்கராந்தி அன்று வெல்ல பானம் பிரசாதமாக வழங்கப்படுகிறது
அதிகாரப்பூர்வ பெயர்பான சங்கராந்தி,மகா விசுப சங்கராந்தி, ஒடிய நுவா வர்சா
பிற பெயர்(கள்)மகா பிசுப சங்கராந்தி
கடைப்பிடிப்போர்ஒடிய மக்கள்
வகைசமூகம், கலாச்சாரம், மதம்
முக்கியத்துவம்ஒடிய புத்தாண்டு
கொண்டாட்டங்கள்மேரு ஜாத்ரா, ஜாமு ஜாத்ரா, சடக் பர்பா
அனுசரிப்புகள்பூசைகள், ஊர்வங்கள், தால்மா, கெச்சுடி, பேலா பனா, மச்சா பாட்டா
நாள்1st பைசாக்கி (ஒடிய நாட்காட்டி]], சூரியச் சுழற்சி)

பான சங்கராந்தி (Pana Sankranti) மகா விசுப சங்கராந்தி என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஒடிசாவில் ஒடிய மக்களின் பாரம்பரிய புத்தாண்டு விழாவாகும். [1] திருவிழாவின் தேதி இந்து நாட்காட்டியான சூரியசந்திர நாட்காட்டியின்படி சூரியச் சுழற்சியுடன், பாரம்பரிய சூரிய மாதமான மேசத்தின் முதல் நாளாகவும், ஒடிய நாட்காட்டியின்படி சந்திர மாதத்தின் வைகாசி முதல் நாளாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய தேசிய அமைப்பில், அதாவது சித்திரையின் 24 வது நாளில் சந்திர மாத வைகாசியின் முழுநிலவு நாளில் வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13/14 அன்று கிரெகொரியின் நாட்காட்டியில் வருகிறது .

இந்த நாள் அனுமனின் பிறந்த நாளாகக் கருதப்படுவதால், சிவன், சக்தி அல்லது அனுமன் ஆகிய தெய்வங்கள் கோயில்களுக்கு வருகை தருவதாக கருதப்பட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது. [2] ஆறுகள் அல்லது முக்கிய புனித யாத்திரை மையங்களில் மக்கள் குளிக்கிறார்கள். சமூகங்கள் கண்காட்சிகள், தெரு நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சமூக கொண்டாட்டங்களின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக வாயில் எரிபொருளை நிரப்பி தீ ஏற்படுத்துவதாகும். மேலும் தன்னார்வலர்கள் இசை மற்றும் பாடல்களால் உற்சாகப்படுத்தப்படுகையில் எரியும் நெருப்பின் மீது ஓடுகிறார்கள். [3] மா,பால்-தயிர்-தேங்காய் ஆகியவை அடங்கிய பானம் போன்ற விருந்துகள் மற்றும் சிறப்பு பானங்கள் பகிரப்படுகின்றன. இந்த பாரம்பரியம் இந்த திருவிழாவின் பெயரின் மூலமாகும்.

பான சங்கராந்தி போன்றே இந்த புத்தாண்டு நாள் மற்ற பெயர்களால் வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. வைசாக்கி (வடக்கு மற்றும் மத்திய இந்தியா), பிஹு ( அசாம் ), பகலா பைசாக் ( வங்காளம் ) மற்றும் புத்தாண்டு ( தமிழ்நாடு ) போன்ற பிற இடங்களில் அனுசரிக்கப்படுகிறது. [4] [5]

அவதானிப்புகள்

வெல்ல பானம் என்பது பால், வில்வப் பழம் மற்றும் மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சிறப்பு பண்டிகை இனிப்பு பானமாகும். இது ஒடியா புத்தாண்டில் பகிரப்படுகிறது
பசுந்தர தேக்கி

ஒடியா பாரம்பரியத்தில், பான சங்கராந்தி இந்து தெய்வமான அனுமனின் பிறந்த நாள் என்று நம்பப்படுகிறது. இராமாயணத்தில் இராமரை (விஷ்ணுவின் ஏழாவது அவதாரம்) வணங்கி ஏற்றுக்கொண்டு புகழ்பெற்றவர். அவரது கோவில்களும், சிவன் மற்றும் சூர்ய தேவன் (சூரியக் கடவுள்) கோயில்களும் புதிய ஆண்டில் போற்றப்படுகின்றன. [2]

இந்துக்கள் பான சங்கராந்தியில் அன்று தேவி (தெய்வம்) கோயில்களுக்கும் வருகை தருகின்றனர். இது போன்ற கோயில்களில் பெர்காம்பூருக்கு அருகிலுள்ள தாரதாரினி கோயில், கஞ்சாம், கட்டாக் சாண்டி, பிராஜா கோயில், சமலேசுவரி கோயில் மற்றும் சரளா கோயில் ஆகியவை அடங்கும். சரளா கோவிலில் ஜாமு யாத்திரை, தீயணைப்பு விழாவில் பக்தர்கள் சூடான நெருப்பில் நடக்கிறார்கள்.

பிரதானத் திருவிழா

கான்டபாதுக்கள் என்ற ஒடிசாவைச் சேர்ந்த பாரம்பரிய ஆண் நாட்டுப்புற கலைஞர்கள், பான சங்கராந்தியின் போது "ஜமா நாட்டா" என்ற கலை வடிவத்தை நிகழ்த்துகின்றனர். அவர்கள் பொதுவாக பெண்களின் ஆடைகளை ஒத்த இரண்டு அல்லது நான்கு ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு குழுவாக நிகழ்த்துகிறார்கள்.

ஒடிசாவின் சோனேபூர் இலங்கேசுவரி கோயிலுக்கு அருகில் பான சங்கராந்தி அன்று நடைபெற்ற ஒரு குழு தெரு நிகழ்ச்சி.
தாய் தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தண்டா நாட்டா, பானாசங்கராந்தியில் தொடங்குகிறது

இந்த திருவிழா கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தப்படும் தண்டா நாட்டா என்பது இப்பகுதியின் செயல்திறன் கலையின் மிகவும் பழமையான வடிவங்களில் ஒன்றாகும். தொடக்க சடங்கு சித்திரையின் நடுவில் (மார்ச் - ஏப்ரல்) தொடங்குகிறது. இக்கலையை நிகழ்த்தும்போது தண்டுவா என்றும் அழைக்கப்படும் கலைஞர்கள், ஒரு குளத்தில் நீராடிவிட்டு, சூடான நெருப்பின் மேல் நடந்து / ஓடுகிறார்கள். தண்டா நாட்டாவைச் செய்தபின், அவர்கள் சிறிது நேரம் ஆழமான நீரில் மூழ்கி ஜலா தண்டாவையும் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் உடல் வலியிலிருந்து விடுதலையைக் குறிக்கின்றன.

தொடர்புடைய திருவிழாக்கள்

இந்த புத்தாண்டு நாள் மற்ற பெயர்களால் வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இது வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் வைசாக்கி என்று அழைக்கப்படுகிறது, இது சூரிய புத்தாண்டையும் குறிக்கிறது. [6] [7] தென்கிழக்கு ஆசியாவின் மியான்மர், இலங்கை மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளில் உள்ள பல பௌத்த சமூகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் புதிய ஆண்டாகும். இது பொ.ச. முதலாம் நூற்றாண்டில் அவர்களின் பகிரப்பட்ட கலாச்சாரத்தின் தாக்கமாக இருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  1. கேரளாவில் விஷு
  2. மத்திய மற்றும் வட இந்தியாவில் வைசாக்கி
  3. மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா வங்காள தேசம் போன்ற இடங்களில் பகேலா பைசாக்
  4. .அசாமில் ரங்காலி பிஹு
  5. நேபாளத்தில் விக்ரம் நாட்காட்டி
  6. இலங்கையில் அழுத் அவுருது [8]
  7. தாய்லாந்தில் சாங்க்கிரான்
  8. கம்போடியாவில் சோல் சம் தமே
  9. லாவோஸில் சாங்க்கன் / பை மை லாவோ
  10. பர்மாவில் திங்கியன்

இருப்பினும், இது அனைத்து இந்துக்களுக்கும் உலகளாவிய புத்தாண்டு அல்ல. குசராத்து மற்றும் அதற்கு அருகிலுள்ள சிலருக்கு, புத்தாண்டு விழாக்கள் ஐந்து நாள் தீபாவளி பண்டிகையுடன் ஒத்துப்போகின்றன. இன்னும் பலருக்கு, உகாதி மற்றும் குடீ பாடவா எனப்பகிறது. [9]

மேற்கோள்கள்

  1. Maha Vishuba Sankranti Odisha celebrates Maha Vishuba Sankranti with Fervor
  2. 2.0 2.1 Jyoshnarani Behera (1997). Political Socialization of Women: A Study of Teenager Girls. Atlantic Publishers. p. 79. ISBN 978-81-85495-21-7.
  3. {{cite book}}: Empty citation (help)
  4. {{cite book}}: Empty citation (help)
  5. Kalyan Kumar Dasgupta (1996). Aspects of Indian history and historiography: Professor Kalyan Kumar Dasgupta felicitation volume. Kaveri Books. p. 111. ISBN 978-81-7479-009-5.
  6. "BBC – Religion: Hinduism – Vaisakhi". பிபிசி. Retrieved 22 January 2012.
  7. Crump, William D. (2014), Encyclopedia of New Year's Holidays Worldwide, MacFarland, page 114
  8. Peter Reeves (2014). The Encyclopedia of the Sri Lankan Diaspora. Didier Millet. p. 174. ISBN 978-981-4260-83-1.
  9. Karen Pechilis (2013). South Asian Religions: Tradition and Today. Routledge. ISBN 978-0-415-44851-2.

மேலும் படிக்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya