பாம்பேலா தேவி இலைசுராம்
பாம்பேலா தேவி இலைசுராம் (Bombayla Devi Laishram) ஓர் இந்திய வில்லாளர் ஆவார். மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பாலில்[1] பிறந்த இவர், 1997[2] ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகளிலும், 2007 ஆம் ஆண்டு முதல் அனைத்துலகப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார். இளம்பருவம்இலைசுராம் 22 February 1985 பிப்ரவரி 22 இல் மணிப்பூரில் பிறந்தார்.[1] இவரதுதாய் உள்ளூர் வில்வித்தைப் பயிற்சியாளரான எம். யாமினி தேவி. தந்தையார் மங்களம் சிங். இவர் மணிப்பூர் கைப்பந்து குழுவின் மாநிலப் பயிற்சியாளர் ஆவார்.[3] இவர் வில்வித்தையைத் தன் 11 ஆம் அகவையிலேயே பயிலத் தொடங்கி, பிறகு இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.[4] இவர் தன் நேர்முகப் பேட்டியொன்றில் தனது குடும்ப விளையாட்டு மரபைப் பின்பற்றியே வில்வித்தையைத் தேர்வு செய்ததாகக் கூறியுள்ளார்.[5] இவர் இப்போது மணிப்பூரில் உள்ள இம்பாலில் வாழ்ந்து வருகிறார்.[6] வாழ்க்கைப் பணிபெய்சிங் நகரில் நடைபெற்ற 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பெண்கள் தனிப்பிரிவிலும், பெண்கள் அணிப்பிரிவிலும் இலைசுராம் பங்கேற்றார். இலைசுராம் , தோலா பாணர்சி மற்றும் பிரணித்தா வர்தினேனி ஆகியோர் இணைந்த பெண்கள் அணி பெண்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 16 ஆவது சுற்றில் கிடைத்த நேரடி வாய்ப்பு மூலம் காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்த இவ்வணி சீனாவிடம் 206-211 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தனிநபர் பிரிவில் தகுதிச்சுற்றின் போது 22 ஆம் இடத்தில் இருந்த இலைசுராம், 64 ஆவது சுற்றில் போலந்தின் மார்சிங்கிவிக்சிடம் 101-103 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார்[7] 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் தனிநபர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவின் ஐடா உரோமனிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்று வெளியேற்றப்பட்டார்[8]. அணிப்பிரிவு ஆட்டத்தில் இவர் இடம்பெற்றிருந்த இந்திய அணி டென்மார்க்கிடம் முதல் சுற்றிலேயே 211-210 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது[9] 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாட இவர் இடம்பெற்றுள்ள அணி இந்தியாவின் சார்பாக பங்கேற்றது. பாம்பேலா தேவி இலைசுராம், தீபிகா குமாரி மற்றும் இலட்சுமிராணி மாய்கி ஆகியோர் அடங்கிய இவ்வணி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது[10]. முன்னதாக கொலம்பியாவுடன் விளையாடி வெற்றியை ஈட்டிய இவர்கள் காலிறுதிப் போட்டியில் உருசியாவிடம் ஆட்டத்தை இழந்தனர்[11]. ஆசுட்ரியாவின் இலாரன்சு பால்டௌஃப்புடன் பெண்கள் தனிநபர் பிரிவில் போட்டியிட்ட இலைசுராம் 6-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். சீன தைபேவைச் சேர்ந்த லின் சிகிச்சியாவுடன் மோதிய அடுத்த சுற்றுப் போட்டியிலும் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று மேலும் ஒரு சுற்றுக்கு முன்னேறினார்[12]. முதல் எட்டு இடங்களில் ஒன்றைப் பிடிப்பதற்கான அடுத்த சுற்றுப் போட்டியில், மெக்சிகோவின் அலேயாண்ட்ரா வேலன்சியாவிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்[13]. விருதுஅருச்சுனா விருது - 2012[14] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia