பால் (இலக்கணம்)பால் என்பதற்கு பகுப்பு/பிரிவு என்று பொருள். இலக்கண நூல்கள் மக்கள் போன்ற உயர்திணையை மூன்று பாலாகவும் (பகுப்புகளாகவும்) அஃறிணையை இரண்டு பாலாகவும் பிரித்துக் காட்டியுள்ளன. அஃறிணைக்குரிய பால்கள்அஃறிணைக்குரிய பால்கள் இரண்டு வகைப்படும்.அவை,
ஆகும். பாலுக்குரிய ஈறுகள்(விகுதிகள்)பாலின் தன்மை இத்தகையது எனக் காட்டுபவை ஈறுகளாகும். இவை பெரும்பாலும் வினைச் சொற்களில் வரும் ஈறுகளையே குறிக்கும். ஆண்பால்னகர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும். பெண்பால்ளகர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும் பலர்பால்அர், ஆர் என்பன பலர்பாலை உணர்த்தும் ஒன்றன்பால்து, று, டு என்பன ஒன்றன்பாலை உணர்த்தும். பலவின்பால்அ, ஆ , வ என்பன பலவின்பாலை உணர்த்தும் ஈறுகள் பொருந்தாத பெயர் சொற்கள்பெயர்ச் சொற்களில் வரும். ஈறுகளில் சில பொருந்தா மக்கள் - ள் ஈறு பெற்றாலும் பெண்பாலைக் குறிக்காது. அலவன்(நண்டு) - ன் ஈறு பெற்றாலும் ஆண்பாலைக் குறிக்காது. தாயார், தாய்மார் - அர், ஆர் ஈறு பெற்றாலும் பலர்பாலைக் குறிக்காது. பேடியும் தெய்வமும்பால் வகையில் அடங்காத ஆண்தன்மை திரிந்த உயர்திணைக்கும், பெண்தன்மை திரிந்த உயர்திணைக்கும் தனியே ஈறு கிடையாது அதுபோல திணை யில் அடங்காத தெய்வத்துக்கும் தனியே ஈறு கிடையாது மேற்கோள்தொல்காப்பியம் . சொல்லதிகாரம். கிளவியாக்கம்-சேனாவரையம் |
Portal di Ensiklopedia Dunia