சோம நந்தி (சீருடற்பயிற்சி விளையாட்டுப் பயிற்சியாளர்)
பிசுவேசுவர் நந்தி (Bishweshwar Nandi) இந்தியாவின்திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சீருடற்பயிற்சி விளையாட்டின் பயிற்சியாளராவார். [1][2][3] இவரும் ஒரு சிறந்த சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராக இருந்தார்.[2][4]அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் இவருக்குப் பயிற்சியளித்தார். [1] நந்தி சீருடற்பயிற்சி விளையாட்டில் ஐந்து முறை தேசிய வெற்றியாளராக இருந்தார். 12 நிகழ்வுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் இந்திய சீருடற்பயிற்சி அணிக்கு ஆறு முறை தலைவராக நின்று வழிநடத்தினார். [4] ஒரு பயிற்சியாளராக இவர் புரிந்த சாதனைகளுக்காக துரோணாச்சார்யா விருது 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [5][6]. தீபா கர்மாகர் இவரிடம் பயிற்சி பெற்ற சீருடற்பயிற்சி வீரர்களில் ஒருவராவார். பிசுவேசுவர் நந்தியின் மனைவி சோமா நந்தியும் ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு பயிற்சியாளராவார். [1][4][5]