பினாங்கு இரண்டாவது பாலம்
சுல்தான் அப்துல் ஆலிம் முவாட்சாம் சா பாலம் அல்லது பினாங்கு இரண்டாவது பாலம் (ஆங்கிலம்: Sultan Abdul Halim Muadzam Shah Bridge; அல்லது Penang Second Bridge; (மலாய்: Jambatan Sultan Abdul Halim Muadzam Shah அல்லது Jambatan Kedua Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது பாலம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் நகர்ப் பகுதியையும்; மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜார்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கிறது.
கண்ணோட்டம்பினாங்கு இரண்டாவது பாலம் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஓர் உயர் தாக்கத் திட்டம் ஆகும். இது ஓர் உயர் தாக்கத் திட்டமாக இருப்பதால், மலேசியாவின் வடக்குப் பெருவழி பொருளாதாரப் பகுதியின் (Northern Corridor Economic Region) சமூகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வரலாறுதிட்டமிடல்ஆகஸ்டு 2006-ஆம் ஆண்டில், ஒன்பதாவது மலேசியத் திட்டதின் கீழ் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டுவதற்கு மலேசிய மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியது. நவம்பர் 12, 2006-இல், புதிய பினாங்கு இரண்டாவது பாலத்திற்கான கட்டுமானத் தொடக்க விழா ஐந்தாவது மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவியால் நிகழ்த்தப் பட்டது. கட்டுமானம்மண் ஆய்வுப் பணி மற்றும் சோதனைத் தொகுப்பு வேலைகளை முடித்த பின்பு, சீனத் துறைமுகப் பொறியியல் கூட்டுறவு நிறுவனம் மற்றும் யூ.இ.ஏம் குழு பாலம் கட்டும் பணி 2011-இல் நிறைவடையும் என்று அறிவித்தது. கட்டுமானப் பணி 2008-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஏப்ரல் 2008-இல், அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தல், வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் உயரும் செலவினங்கள் காரணமாக ஒன்பது மாதங்கள் தாமதமாகும் என அறிவித்தது. பாலத்தின் கட்டுமானத் தொடக்கம்நவம்பர் 8, 2008-இல், சீனத் துறைமுகப் பொறியியல் கூட்டுறவு நிறுவனத்தின் மூலமாக இரண்டாவது பாலக் கட்டுமானம் தொடங்கியது. அக்டோபர் 3, 2012-இல், நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவான செப்டம்பர் 2013-க்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாயின. ஏப்ரல் 20, 2013-இல், கம்பி வடங்களின் இறுதிப் பணி முடிக்கப்பட்டதும், பாலத்தின் கட்டுமானமும் நிறைவு அடைந்தது. ஏப்ரல் 30, 2013 அன்று, ஆறாவது பிரதமர் நஜிப் துன் ரசாக் செபராங் பிறையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார். அப்போது பினாங்குத் தீவுப் பகுதியில் இருந்து தீகற்ப நிலப் பகுதிக்குச் செல்ல பாலத்தில் 24 கி.மீ. தொலைவு சென்றார். இந்தப் பாலத்தைப் பயன்படுத்திய நாட்டின் முதல் தலைவர் ஆனார். பாலம் முதலில் நவம்பர் 8, 2013 அன்று திறப்பதற்குத் திட்டமிடப்பட்டது. எனினும் திறப்புத் தேதி, மார்ச் 1-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. பாலம் திறப்பு விழாபினாங்கு இரண்டாவது பாலம்; மார்ச் 1, 2014 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களால் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. நஜிப் துன் ரசாக் பினாங்கு இரண்டாவது பாலத்திற்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் என்று பெயர் சூட்டினார், பாலம் திறப்பு விழா முடிந்த பிறகு 12:01 மணிக்கு போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது . தொழில்நுட்ப குறிப்புகள்பாலம்![]() சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் உயர் தணித்த இயற்கை ரப்பர் (HDNR) தாங்கி கொண்டு, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாங்கும் பாலமாகச் செயல் படுகிறது. விவரக் குறிப்பீடு
மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia