பிரசா ராச்யம் கட்சி
பிரஜா ராச்யம் கட்சி 2008இல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியால் தொடங்கின அரசியல் கட்சியாகும். 2009ம் ஆண்டு 15வு மக்களவையுடன் இணைந்து நடக்கும் ஆந்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றத்தின் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் இக்கட்சி போட்டியிட்ட இரயில் எஞ்சின் சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது [1][2][3]. 2009ம் ஆண்டு நடந்த மக்களவைதேர்தலில் இக்கட்சி வெற்றி பெறவில்லை ஆனால் மக்களவைதேர்தலுடன் இணைந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி 18 இடங்களை வென்றது, 16.12% வாக்குகளை பெற்று இக்கட்சி மூன்றாவதாக வந்தது[4] . இக்கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்[5] ஆகத்து 22, 2011 அன்று முறைப்படி முழுமையாக இணைக்கப்பட்டுவிடும் என தெரிகிறது[6]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia