பிரதாப்கர் சமஸ்தானம்
![]() பிரதாப்கர் சமஸ்தானம் (Pratapgarh State), இராஜபுதனம் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] ரத்தோர் வம்ச இராஜபுத்திரர்கள் நிறுவிய பிரதாப்கர் இராச்சியத்தை 1425-இல் கந்தல் இராச்சியம் என அழைக்கப்பட்டது. பின்னர் 1514-இல் மன்னர் இராஜ்குமார் சூரஜ்மல் ஆட்சியின் போது இதன் தலைநகரம் பிரதாப்கர் நகரத்திற்கு மாற்றிய போது, இந்த இராச்சியத்தை பிரதாப்கர் இராச்சியம் என அழைக்கப்பட்டது. வரலாறு1425-ஆம் ஆண்டு முதல் 1818-ஆம் ஆண்டு வரை தன்னாட்சியுடன் முடியாட்சியாக பிரதாப்கர் இராச்சியம் செயல்பட்டது. பின்னர் [ பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த பிரதாப்கர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [2][3][4][5] 15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[6] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், பிரதாப்கர் சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்காட் மாவட்டமாக உள்ளது. இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia