பி. கே. என். வித்யாசாலா
பி.கே.என் வித்தியாசாலா (ஆங்கிலம்: PKN Vidhyasala) என்பது 2 தொடக்கப்பள்ளி, 2 ஆரம்பப்பள்ளி, 2 மேல்நிலைப் பள்ளிகள், 3 பதின்ம மேல்நிலைப் பள்ளிகள், 1 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளி மற்றும் 1 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 11 கல்வி நிறுவனங்கைளைக் கொண்ட ஒரு கல்வி அறக்கட்டளையாகும். இவ்வறக்கட்டளையானது மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ளது. வரலாறுபி. கே. என் வித்தியாசாலா சங்கம், திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறையினரால் 1909ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடங்கப் பெற்றது. இது தற்பொழுது 10 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரி என விரிவடைந்துள்ளது. 2009 - 2010 கல்வியாண்டில் பி. கே. என் பள்ளிகளின் நூற்றாண்டு விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான அறிவியல் கண்காட்சியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரான முனைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்[1]. அமைவிடம்பி. கே. என் வித்தியாசாலா சங்கம், மதுரை மாவட்டம் திருமங்கலம் பி. கே. என் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ளது. இவ்வறக்கட்டளையானது 20கிமீ. வடக்கில் மதுரையையும், 28கிமீ. தெற்கில் விருதுநகரையும் கொண்டு, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கல்வி நிலையங்கள்![]()
முன்னாள் மாணவர்கள்
இவற்றையும் பார்க்க
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia