புதுச்சேரி மக்கள் காங்கிரசுபுதுச்சேரி மக்கள் காங்கிரசு (Puducherry Makkal Congress) அல்லது பாண்டிச்சேரி மக்கள் காங்கிரசு என்பது இந்திய ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியில் (முன்பு பாண்டிச்சேரி) செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழ் மாநில காங்கிரசின் பிளவுபட்ட குழுவாக இக்கட்சி உருவாக்கப்பட்டது. புதுச்சேரி மக்கள் காங்கிரசின் அபார் ஏழுமலை ஆவார். 2001 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், இக்கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. 2001 வரை, புதுச்சேரி மக்கள் காங்கிரசு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரித்தது. பின்னர் அது இந்திய தேசிய காங்கிரசினை ஆதரிக்கத் தொடங்கியது. ஆகத்து 2002-இல் இக்கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சி ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஒதுக்கிய பின்னர் பி. கண்ணன் காங்கிரசை விட்டு வெளியேறினார். 2005ஆம் ஆண்டு நிலவரப்படி, புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசு என்ற புதிய கட்சியை பி. கண்ணன் உருவாக்கினார்.[1] மேலும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia