பெரிநாக்
பெரிநாக் (Berinag) என்பது ஒரு மலை வாழிடமாகும். இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் கிழக்கு திசையில் உள்ள இமயமலை மாவட்டமான பிதௌரகர் மாவட்டத்தின் நைனித்தாலிருந்து, 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது பிதௌரகரின் ஆறு நிர்வாக உட்பிரிவுகளில் (வட்டம்) ஒன்றாகும். [1] தேசிய நெடுஞ்சாலை 309ஏ இதன் வழியாக செல்கிறது. காரவோன், தனோலி, பனா, பட்டிகான், பனோலி, குவாராலி, திரிபுராதேவி மற்றும் சங்கர் ஆகியவை இங்குள்ள சில கிராமங்களில் அடங்கும். பின்னணிபெரிநாக் அதன் பெயரை பெரிநாக் கோயிலில் இருந்து பெறுகிறது [2] (உள்ளூரில் 'பெடிநாக்' என்று அழைக்கப்படுகிறது). இது பெரிநாக் மலையுச்சியில் அமைந்துள்ள ஒரு நாக தேவதை கோயிலாகும். நாக வழிபாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தௌலிநாக் (தாவல்நாக்) (விஜய்பூர்), காளிநாக் (காளியாநாக்), பெனிநாக் (பானிநாக்), பாசுகிநாக் (வாசுகிநாக்), பிங்லெநாக் மற்றும் ஹரிநாக் போன்ற பல கோயில்களும் இங்குள்ளது. பெரிநாக் இமயமலையின் பரந்த காட்சியை வழங்குகிறது. கார்வால் இமயமலை முதல் நேபாள எல்லைகள் வரை, குறிப்பாக பஞ்சசூலி மற்றும் நந்தா தேவி போன்ற உயரமான சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதி பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்களுக்கு பிரபலமானது. இங்கு வளர்க்கப்படும் பெரிநாக் தேயிலையானது இலண்டன் தேநீர் விடுதிகளில் அதிகம் விரும்பப்படும் தேயிலையாகும். போக்குவரத்து
படத் தொகுப்புமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்= |
Portal di Ensiklopedia Dunia