பெரும்பற்றப்புலியூர் நம்பிபெரும்பற்றப்புலியூர் நம்பி[1] என்பவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எனும் சைவ நூலை இயற்றிய ஆசிரியராவார். இவர் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் புலவர்.[2] இந்நூலே திருவிளையாடற் புராணத்தின் முதல் நூலாகும். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்உத்தரமகாபுராணம் எனும் வடமொழியில் சிவபெருமானைப் பற்றிய கதைகள் கூறப்பட்டிருந்தன. அவற்றில் சாரசமுச்சயம் எனும் பகுதியிலிருந்து 64 திருவிளையாடல்களை தமிழுக்குத் தந்தார் பெரும்பற்றப்புலியூர் நம்பி. சிறப்புஇவருடைய புராணக் கதைகளில் சில கலித்தொகை, பரிபாடல் முதலான நூல்களிலும் காணப்படுகின்றன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் கூடப் புராணக் கதைகளைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அவற்றில் கதைத் துணுக்கிகளே உள்ளன. இந்தப் பெருபற்றப்புலியூர் நம்பிதான் முதன்முதலாகப் பல கதைகளின் தொகுப்பாகப் 'புராணம்' என்னும் நூலை உருவாக்கினார். மாபுராணம், பூதபுராணம் என்னும் பெயரில் இடைச்சங்க காடத்து நூல்களாகக் காட்டப்பட்டுள்ள நூல்கள் இலக்கண நூல்கள். இந்த நம்பியின் ஊரான பெரும்பற்றப்புலியூர் செல்லிநாட்டில் இருந்தது. இது சங்ககாலத்துச் செல்லூர். நம்பிஇவருக்கு முன்னர் நம்பி என்னும் பெயர் கொண்ட சிலர் இருந்தனர்.
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia