ப. சதாசிவம்
ப. சதாசிவம் அல்லது பி. சதாசிவம் முன்னாள் கேரள ஆளுநராவார். முன்னதாக இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.[1][2] இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாகச் சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார்.[3][4] தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றியது இது இரண்டாவது முறையாகும். 1951 முதல் 1954 வரை திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரை சேர்ந்த நீதிபதி பதஞ்ஜலி சாஸ்திரி இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.ஆகத்து , 2014இல் கேரள மாநில ஆளுநராக இருந்த சீலா தீக்சித் தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து , அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.[5] இந்திய வரலாற்றில் , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை .[6] இளமைப் பருவம் மற்றும் கல்விஇவர் ஈரோடு மாவட்டம், பவானி, காடப்பநல்லூர் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் பழனிச்சாமி, தாயார் பெயர் நாச்சியம்மாள்[7].சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இவர் சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் முடித்தார்.[8] தொழில்சனவரி 8, 1996ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 20, 2007 பஞ்சாப் & அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 21, 2007 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கவில்லை.[3] இவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒரியாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகித்தானிய அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார்.[3] பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.[9] சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள்குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கட்ட ஓர் ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவர். வழங்கிய முக்கியத் தீர்ப்புகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia