மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆகும்.[1] இந்த தொடருக்கு வி. பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார்.
இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் செப்டம்பர் 22, 2013 முதல் ஆகத்து 16, 2014 வரை ஒளிபரப்பாகி 267 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
மொழிமாற்றம்
தொடரை செவன்த் சேனல் சமஸ்கிருதம் கலந்த தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளது. இந்த தொடர் இந்திய மொழிகள் ஆனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, மற்றும் வங்காள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்தோனேசிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்கள்
தொடரின் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத வார்த்தைகளே நிறைந்துள்ளன என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.[மேற்கோள் தேவை]
ஒளிபரப்பாகும் நேரம்
இந்தி மொழியில் மஹாபாரத் என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.