மகாராசகடை
மகாராசகடை (Maharajakadai) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊர், கிருட்டிணகிரியிலிருந்து குப்பம் (ஆந்திரா) செல்லும் சாலையில் உள்ளது. இது நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊருக்கு அருகே அங்கணா மாலை உள்ளது. இந்த மலையில் உள்ள கோட்டைக்காகவும் பெருங்கற்கால சின்னங்களுக்காவும் குறிப்பிடப்படுகிறது. பெயர் வரலாறுபருகூருக்கு அடுத்த காரகுப்பம் பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஹரிஹரர் காலத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. அந்தக் கல்வெட்டில் அங்கண நாட்டுப் பால சமுத்திரத்தைச் சேர்ந்த மதுகன் என்ற அதிகாரி குறிப்பிடபட்டுள்ளார் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கண நாடு பிற்காலத்தில் மகராஜாகடை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை குறிப்பிடுவதாக இருந்துள்ளது.[1] அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
இதையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia