மங்கம்மாள் சத்திரம், நரிக்குடி

மங்கம்மாள் சத்திரம் என்பது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள மறையூரில் உள்ள ஒரு சத்திரம் ஆகும்.

அமைவிடம்

இச்சத்திரம் நரிக்குடி அருகில் மறையூரில் அமைந்துள்ளது. [1] இது இராமேசுவரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டது.[2]

அமைப்பு

இச்சத்திரம் இராணி மங்கம்மாள் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். அவரும், பிறரும் ஓய்வெடுப்பதற்காகக் கட்டப்பட்டது. இராணி மங்கம்மாளால் ஏற்படுத்தப்பட்டதாகவும், அவரது நினைவாக ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது அழகிய வேலைப்பாடுகளுடன் பல தூண்களைக் கொண்டுள்ளது. சித்திர வேலைப்பாடுகளும் இதில் உள்ளன. [1] இந்தச் சத்திரத்தில் மிகவும் வேலைப்பாடு நிறைந்த கற்தூண்களில் அழகான சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அழகிய முற்றத்துடன் நடு மண்டபம், 52க்கும் மேற்பட்ட கற்தூண்கள், இரு புறங்களிலும் வாசல்கள் போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும். [3].

தற்போதைய நிலை

50 ஆண்டுகளுக்கு முன் மாணவர் பயிலும் பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் புனரமைக்காததால் இச்சத்திரம் தற்சமயம் பாழடைந்த நிலையில் உள்ளது. [1] இச்சத்திரத்தையும், காரியாபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள சத்திரங்களையும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. [4] [3]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 நரிக்குடி அருகே பாழடைந்த மங்கம்மாள் சத்திரத்தை புனரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல், தினமணி, 22 சூலை 2022
  2. "மறையூர் அன்னசத்திரம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி". Hindu Tamil Thisai. 2024-11-11. Retrieved 2025-04-02.
  3. 3.0 3.1 அழியும் நிலையில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரம் - மாவட்ட நிர்வாகம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை, ஜெயாநியூஸ், 10 செப்டம்பர் 2021
  4. கவனியுங்களேன்: சிதிலமடைந்து, கேட்பாரட்டுக்கிடக்கும் சத்திரங்கள், தினமலர், 2 செப்டம்பர் 2019

இவற்றையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya